நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரெப்பா சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான எஸ். வீரப்பன் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அடுத்த 60 நாட்களுக்குள் மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இனம், மதம் பாராமல் மக்களின் நலனுக்காகவும் தொகுதி மேம்பாட்டிற்காகவும் பாடுபட வாய்ப்பளித்த அனைத்துப் பொதுமக்களுக்கும், அரசு இயந்திரங்களுக்கும் அவர் தனது நன்றியறிதலைப் பதிவு செய்துள்ளார்.
அரசியல் நகர்வுகளால் சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டாலும், வரவிருக்கும் தேர்தலில் மக்கள் தனக்கு மீண்டும் ஆதரவளித்தால், தெளிவான திட்டமிடல்களுடன் தொகுதி வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுப்பதாக எஸ். வீரப்பன் உறுதியளித்துள்ளார்.









