வரும் நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் சில புதிய முகங்களை டிஏபி அறிமுகப்படுத்தவிருக்கிறது என்று அதன் தலைவர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். அதேவேளையில் கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற சில சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் வேட்பாளர்களாக முன்மொழிப்படாது என்பதையும் அந்தோணி லோக் விளக்கினார்.நெகிரி செம்பிலான், டிஏபி செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் என்ற முறையில் தாம் தலைமையேற்ற போது கட்சியின் போராட்டத்திற்கும், மக்கள் வழங்கிய ஆதரவுக்கும் சிறப்பான முறையில் தங்கள் பங்களிப்பை வழங்கிய ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தமது நன்றியை பதிவு செய்து கொண்டதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார். எந்தவொரு பொதுத் தேர்தலிலும் மாற்றங்கள் இருக்கும். அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று தாம் கேட்டுக்கொண்டதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்


