மஇகாவின் முன்னாள் உதவித் தலைவரும், மேலவை உறுப்பினருமான டத்தோ சிவராஜ் சந்திரன், அக்கட்சிலிருந்து விலகியதைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு முக்கியத் தலைவர் மஇகாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவரான பி. புனிதன், மஇகாவிலிருந்து விலகியுள்ளார். தமது விலகலை மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனிடம் ஒரு கடித வாயிலாக இன்று தெரியப்படுத்தி இருப்பதாக புனிதன் குறிப்பிட்டுள்ளார்.
சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் மற்றும் கோல சிலாங்கூர், பண்டார் பாரு பாதாங் பெர்ஜுந்தாய் கிளையின் இளைஞர் பிரிவுத் தலைவர் ஆகிய பொறுப்புகளிலிருந்து விலகுவதாக புனிதன் அறிவித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டு காலமாக மஇகாவில் இருந்த தாம் மிகுந்த மனத்தாங்களுடன் அக்கட்சியை விட்டு விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


