மஇகாவின் முன்னாள் உதவித் தலைவரும், மேலவை உறுப்பினருமான டத்தோ சிவராஜ் சந்திரன், அக்கட்சிலிருந்து விலகியதைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு முக்கியத் தலைவர் மஇகாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவரான பி. புனிதன், மஇகாவிலிருந்து விலகியுள்ளார். தமது விலகலை மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனிடம் ஒரு கடித வாயிலாக இன்று தெரியப்படுத்தி இருப்பதாக புனிதன் குறிப்பிட்டுள்ளார்.
சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் மற்றும் கோல சிலாங்கூர், பண்டார் பாரு பாதாங் பெர்ஜுந்தாய் கிளையின் இளைஞர் பிரிவுத் தலைவர் ஆகிய பொறுப்புகளிலிருந்து விலகுவதாக புனிதன் அறிவித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டு காலமாக மஇகாவில் இருந்த தாம் மிகுந்த மனத்தாங்களுடன் அக்கட்சியை விட்டு விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


