மஇகாவின் முன்னாள் உதவித் தலைவரும், மேலவை உறுப்பினருமான டத்தோ சிவராஜ் சந்திரன், அக்கட்சிலிருந்து விலகியதைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு முக்கியத் தலைவர் மஇகாவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவரான பி. புனிதன், மஇகாவிலிருந்து விலகியுள்ளார். தமது விலகலை மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனிடம் ஒரு கடித வாயிலாக இன்று தெரியப்படுத்தி இருப்பதாக புனிதன் குறிப்பிட்டுள்ளார்.
சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் மற்றும் கோல சிலாங்கூர், பண்டார் பாரு பாதாங் பெர்ஜுந்தாய் கிளையின் இளைஞர் பிரிவுத் தலைவர் ஆகிய பொறுப்புகளிலிருந்து விலகுவதாக புனிதன் அறிவித்துள்ளார்.
கடந்த 15 ஆண்டு காலமாக மஇகாவில் இருந்த தாம் மிகுந்த மனத்தாங்களுடன் அக்கட்சியை விட்டு விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்


