Dec 22, 2025
Thisaigal NewsYouTube
வேட்பாளரை டிஏபி இன்னும் முடிவு செய்யவில்லை
அரசியல்

வேட்பாளரை டிஏபி இன்னும் முடிவு செய்யவில்லை

Share:

கோல குபு பாரு, ஏப்ரல் 18-

கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கவிருக்கும் வேட்பாளர் குறித்து டிஏபி இன்னும் முடிவெடுக்கவில்லை என அதன் பொதுச்செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

தற்போதைக்கு, சில வேட்பாளர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதிலிருந்து வேட்பாளரை தீர்மானிப்பது குறித்து பிறகு கலந்துரையாடப்படும் என்றாரவர்.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட தொகுதியில் மலாய் வேட்பாளரை டிஏபி நிறுத்தவிருப்பதாக வெளியாகியுள்ள ஆருடம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பிய நிலையில், வேட்பாளராக முன்னிறுத்த, எவரும் பரிசீலிக்கப்படலாம் என அந்தோனி லோக் கூறினார்.

கோல குபு பாரு தொகுதியில் செல்வாக்குமிக்கவராக இருந்துவரும் ஹுலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் சரிபா பாக்கர்-ரை டிஏபி வேட்பாளராக நிறுத்தவிருப்பதாக, நேற்று தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்