புத்ராஜெயா, ஜூலை.14-
பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சந்திப்பு ஒன்றை நடத்தினார். வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய சில நடப்பு விவகாரங்கள் குறித்து தனது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி எம்.பி.களுக்கு அவர் விளக்கம் அளித்தார்.
இன்று மாலை 4.30 மணிக்கு புத்ராஜெயா ஸ்ரீ பெர்டானாவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக், அமானா கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் சாபு ஆகியோர் தத்தம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து கொண்டனர்.