Jun 9, 2026
Thisaigal NewsYouTube
"நான் பதவி விலகிய பிறகு அம்னோ துண்டு துண்டாகி விட்டது" - மகாதீர் வருத்தம்
அரசியல்

"நான் பதவி விலகிய பிறகு அம்னோ துண்டு துண்டாகி விட்டது" - மகாதீர் வருத்தம்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.01-

கடந்த 2003-ஆம் ஆண்டு, பிரதமர் பதவியிலிருந்து தான் ஓய்வு பெற்ற பிறகு, அம்னோ துண்டு துண்டாக உடைந்து, மலாய் அரசியல் ஆதரவு பல கட்சிகளாகப் பிரிந்து விட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

கடந்த 1981 முதல் 2003-ஆம் ஆண்டு வரை, தான் பிரதமராகவும், கட்சித் தலைவராகவும் இருந்த காலத்தில், அம்னோவில் அனைத்து மலாய்க்காரர்களும் ஒற்றுமையாக இருந்தனர் என்று பேட்டி ஒன்றில் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

மலாய் இனத்தின் ஒற்றுமை மலாய்க்காரர்களுக்குப் பலத்தைக் கொடுத்தது என்று குறிப்பிட்டுள்ள மகாதீர், அவர்கள் தேர்தல்களில் வெற்றி பெறக் காரணமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், கட்சியை யார் வழிநடத்தப் போகிறார்கள் அல்லது தலைவருக்குப் பிறகு யார் வெற்றி பெறுவார்கள் என்பதில் எந்த சர்ச்சையும், குழப்பமும் அப்போது இருந்தது இல்லை என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தான் பிரதமர் பதவியிலிருந்தும், அம்னோ தலைவர் பதவியிலிருந்தும் விலகிய பிறகு, இந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.

Related News

ஒற்றுமை அரசாங்கம் அமைய பாரிசான் தான் காரணமா? - சாஹிட்டின் கருத்திற்கு அன்வாரின் அரசியல் செயலாளர் பதிலடி

ஒற்றுமை அரசாங்கம் அமைய பாரிசான் தான் காரணமா? - சாஹிட்டின் கருத்திற்கு அன்வாரின் அரசியல் செயலாளர் பதிலடி

பழைய அரசியல் வேண்டாம்: ஜொகூர் மந்திரி புசாருக்கு மஹ்பூஸ் ஒமர் சாடல்!

பழைய அரசியல் வேண்டாம்: ஜொகூர் மந்திரி புசாருக்கு மஹ்பூஸ் ஒமர் சாடல்!

மாநிலத் தேர்தல் காய்ச்சல்: வாக்காளர்களின் விவேகமான தேர்வு அவசியம்!

மாநிலத் தேர்தல் காய்ச்சல்: வாக்காளர்களின் விவேகமான தேர்வு அவசியம்!

"அந்த அகந்தையுடனேயே தொடருங்கள்" - ஓன் ஹாஃபிஸ் கூறிய கருத்திற்கு அந்தோணி லோக் பதிலடி

"அந்த அகந்தையுடனேயே தொடருங்கள்" - ஓன் ஹாஃபிஸ் கூறிய கருத்திற்கு அந்தோணி லோக் பதிலடி

பொய்யான தகவல்களை எதிர்க்கொள்ளத் தயாராகுங்கள் - பாரிசான் ஆதரவாளர்களுக்கு ஸாஹிட் அறிவுறுத்தல்

பொய்யான தகவல்களை எதிர்க்கொள்ளத் தயாராகுங்கள் - பாரிசான் ஆதரவாளர்களுக்கு ஸாஹிட் அறிவுறுத்தல்

"ஜசெக வுடன் கூட்டணி அமைக்கும் சூழல் ஏற்பட்டால் பதவி விலகுவேன்" - ஜோகூர் மந்திரி பெசார் திட்டவட்டம்

"ஜசெக வுடன் கூட்டணி அமைக்கும் சூழல் ஏற்பட்டால் பதவி விலகுவேன்" - ஜோகூர் மந்திரி பெசார் திட்டவட்டம்