கடந்த 1999 ஆம் ஆண்டு வழங்கிய ஆதரவைப் போல, உலு கிள்ளான் சட்டமன்றத் தொகுதியில் தாம் மீண்டும் தேர்வு செய்யப்படலாம் என்று பெரிக்காத்தான் நேஷனலின் சிலாங்கூர் மாநிலத் தலைவருமான அஸ்மின் அலி தெரிவித்தார். கடந்த 1999 ஆம் ஆண்டு தாம் போட்டியிட்டு, வென்றத் தொகுதியை மீண்டும் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத்தலைவருமான அஸ்மின் அலி நம்பிக்கை தெரிவித்தார். உலு சிலாங்கூர் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பானின் பலம் பொருந்திய வேட்பாளர் ஜுவைரியா சுல்கிஃப்லி யுடன் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். முன்னதாக காலை 8.50 மணியளவில் தமது மனைவி ஷம்ஷிதா வுடன் வாக்களிக்க வந்த அஸ்மின் அலி, கிள்ளான் கேட் தேசியப் பள்ளியில் தமது வாக்கை செலுத்தினார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


