கடந்த 1999 ஆம் ஆண்டு வழங்கிய ஆதரவைப் போல, உலு கிள்ளான் சட்டமன்றத் தொகுதியில் தாம் மீண்டும் தேர்வு செய்யப்படலாம் என்று பெரிக்காத்தான் நேஷனலின் சிலாங்கூர் மாநிலத் தலைவருமான அஸ்மின் அலி தெரிவித்தார். கடந்த 1999 ஆம் ஆண்டு தாம் போட்டியிட்டு, வென்றத் தொகுதியை மீண்டும் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத்தலைவருமான அஸ்மின் அலி நம்பிக்கை தெரிவித்தார். உலு சிலாங்கூர் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பானின் பலம் பொருந்திய வேட்பாளர் ஜுவைரியா சுல்கிஃப்லி யுடன் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். முன்னதாக காலை 8.50 மணியளவில் தமது மனைவி ஷம்ஷிதா வுடன் வாக்களிக்க வந்த அஸ்மின் அலி, கிள்ளான் கேட் தேசியப் பள்ளியில் தமது வாக்கை செலுத்தினார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்


