மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஆயுத மோதல்களை உடனடியாக நிறுத்திவிட்டு அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது வலியுறுத்தியுள்ளார்.
பிரச்சினைகளைத் தீர்க்க போர் ஒருபோதும் தீர்வாகாது; பேச்சுவார்த்தை, மத்தியஸ்தம் அல்லது நீதிமன்றங்கள் மூலமே சுமுக முடிவை எட்ட முடியும். போர் என்பது மனிதர்களைக் கொல்வதாகும்; நவீன உலகில் மோதல்களுக்கு தீர்வாகப் போரை ஏற்றுக்கொள்வதை மனிதநேயத்தால் நினைத்துப் பார்க்க முடியாது என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.
போரை விட பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பது செலவு குறைவானது மற்றும் அழிவைத் தவிர்க்கக்கூடியது.
உலகளாவிய எரிபொருள் பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில், உலகத் தலைவர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என துன் மகாதீர் கேட்டுக்கொண்டுள்ளார்.








