1976 ஆம் ஆண்டு சபா முதலமைச்சர் stephens fuad உட்பட 10 பேர் உயிரிழந்த double six விமான விபத்தின் புலன் விசாரணை அறிக்கை, ரகசிய காப்புச் சட்டத்தின் கீழ் எதற்காக வைக்கப்பட்டது என்பது குறித்து மலேசிய அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டுமென்று சபா முன்னாள் முதலமைச்சர் datuk yong teck lee கேட்டுக்கொண்டார்.
விமான விபத்து தொடர்பான மலேசியாவின் அறிக்கை, புலன் விசாரணையின் தேடல் மற்றும் முடிவை அடிப்படையாக கொண்டதாகும்.
மத்திய மற்றும் சபா மாநில அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொடர்புகள் மற்றும் sabah air விமான நிறுவனம் தொடர்புடைய எந்த விவரங்களும் அந்த அறிக்கையில் இடம் பெறவில்லை என்று yong குறிப்பிட்டார்.
ஆனால், இந்த விமான விபத்து தொடர்பாக புலன் விசாரணை மேற்கொண்ட ஆஸ்திரேலியா அதிகாரிகள் மாறுப்பட்ட தகவலை வெளியிட்டிருப்பது ஏன்? இதில் எது உண்மை? என்பது குறித்து அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபா முன்னேற்றக் கட்சியின் தலைவருமான yong teck lee கேட்டுக்கொண்டார்.