Mar 6, 2026
Thisaigal NewsYouTube
75.8 விழுக்காட்டை மலேசியா அடைந்துள்ளது
அரசியல்

75.8 விழுக்காட்டை மலேசியா அடைந்துள்ளது

Share:

கோலாலம்பூர், நவ. 9-


இவ்வாண்டில் இதுவரையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 75.8 விழுக்காட்டு இலக்கை, நாடு அடைந்துள்ளதாக நகர் மற்றும் புறநகர் திட்டமிடல் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் அலியாஸ் ரம்லி தெரிவித்தார்.

மலேசியாவில் 6 மாநகரங்களில் மட்டுமே மக்களின் அடர்த்தி நிலை பதிவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். கோலாலம்பூர், புத்ராஜெயா, ஷா ஆலாம், பினாங்கு, ஜோகூர்பாரு மற்றும் மலாக்கா ஆகியவை மக்களின் அடர்த்திக்குரியப் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மாநகரங்களை நோக்கி மக்களின் நகர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு பார்க்கையில், வருகின்ற 2030 ஆம் ஆண்டில் மக்களின் எண்ணிக்கையில் 80 விழுக்காட்டினர், நகரங்கள், மாநகரங்கள் மற்றும் தலைப்பட்டிணங்களில் வசிக்கக்கூடியவர்களாக இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மாநகரங்களில் மக்களின் அடர்த்தி நிலையை கருத்தில் கொண்டு, கால்வாய் விரிவாக்கம், குடிநீர் மற்றும் மின்சார விநியோகம் போன்ற அடிப்படை வசதிகளை இப்போதே மேம்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி