Apr 23, 2026
Thisaigal NewsYouTube
75.8 விழுக்காட்டை மலேசியா அடைந்துள்ளது
அரசியல்

75.8 விழுக்காட்டை மலேசியா அடைந்துள்ளது

Share:

கோலாலம்பூர், நவ. 9-


இவ்வாண்டில் இதுவரையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 75.8 விழுக்காட்டு இலக்கை, நாடு அடைந்துள்ளதாக நகர் மற்றும் புறநகர் திட்டமிடல் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் அலியாஸ் ரம்லி தெரிவித்தார்.

மலேசியாவில் 6 மாநகரங்களில் மட்டுமே மக்களின் அடர்த்தி நிலை பதிவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். கோலாலம்பூர், புத்ராஜெயா, ஷா ஆலாம், பினாங்கு, ஜோகூர்பாரு மற்றும் மலாக்கா ஆகியவை மக்களின் அடர்த்திக்குரியப் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மாநகரங்களை நோக்கி மக்களின் நகர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு பார்க்கையில், வருகின்ற 2030 ஆம் ஆண்டில் மக்களின் எண்ணிக்கையில் 80 விழுக்காட்டினர், நகரங்கள், மாநகரங்கள் மற்றும் தலைப்பட்டிணங்களில் வசிக்கக்கூடியவர்களாக இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மாநகரங்களில் மக்களின் அடர்த்தி நிலையை கருத்தில் கொண்டு, கால்வாய் விரிவாக்கம், குடிநீர் மற்றும் மின்சார விநியோகம் போன்ற அடிப்படை வசதிகளை இப்போதே மேம்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!