Oct 21, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

தகுதி வாய்ந்த வேட்பாளரைக் கண்டறிய மார்ச் 12 இல் சந்திப்பு

Share:

ஈப்போ, மார்ச்.08-

தாப்பா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிடவிருக்கும் தகுதியும், ஆற்றலும் வாய்ந்த வேட்பாளரைக் கண்டறிவதற்கு வரும் மார்ச் 12 ஆம் தேதி அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியுடன் சந்திப்பு நடத்தப்படும் என்று பேரா மந்திரி பெசார் டத்தோஶ்ரீ சாரணி முகமட் தெரிவித்துள்ளார்.

சாத்தியமான வேட்பாளர்களின் கள மதிப்பீடுகளிலிருந்து முடிவுகளை எடுக்க இந்த சந்திப்பு நடத்தப்படும் என்று பேரா மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவருமான சாரணி முகமட் குறிப்பிட்டார்.

இந்த இடைத் தேர்தலில் அம்னோ சார்பில் போட்டியிடுவதற்கு இதுவரையில் எட்டு வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் இருவர், தங்கள் பெயரை மீட்டுக் கொண்டு விட்டனர் என்று சாரணி குறிப்பிட்டார்.

ஆயர் கூனிங் இடைத் தேர்தல் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 12 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!