Jan 21, 2026
Thisaigal NewsYouTube
தன்னிச்சையாக போட்டியிம் முடிவை மூடா மறு பரிசீலனை செய்ய வேண்டும்
அரசியல்

தன்னிச்சையாக போட்டியிம் முடிவை மூடா மறு பரிசீலனை செய்ய வேண்டும்

Share:

ஆறு மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மூடா கட்சி தன்னிச்சையாக போட்டியிடவிருக்கிறது என்று அதன் தலைவர் ஷெட் செடிக் ஷெட் அப்துல் ரஹ்மான் அறிவித்ததைத் தொடர்ந்து, இம்முடிவை மூடா கட்சி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கன்டார் முஹமாட் ஆகின் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, எந்தவொரு கூட்டணியுடன் இணையாமல், மூடா கட்சி தன்னிச்சையாக போட்டிடும் என்று அக்கட்சியின் உயர்மட்டக்குழு ஏகமனதாக முடிவு செய்துள்ளதாக மூவார் எம்.பி.யுமான சையிட் சாடிக் குறிப்பிட்டார். இந்த முடிவை அனைத்து தலைவரும் ஏற்றுக்கொண்டு மதிக்க வேண்டும் என்றாலும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் அங்கமாக மூடா கட்சி இடம் பெற்று இருப்பதனால், அதன் முடிவை பரிசலீப்பது சிறந்தது என்று ஷம்சுல் இஸ்கன்டார் வலியுறுத்தினார்.

Related News