Jun 27, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு
அரசியல்

சட்டத்துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு

Share:

கோலாலம்பூர், நவ. 14-


செயற்கை நுண்ணறிவான AI ஐ, தொழில்நுட்பத்தை சட்டத் துறையில் பயன் படுத்துவதற்கு இன்னும் ஆழமாக ஆய்வு மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஒரு கூட்டுக் குழுவை அமைத்துள்ளதாக சட்டத்துறை தலைவர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் தெரிவித்தார்.

கூட்டரசு நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகத்துடன் நிறுவப்பட்ட இக்குழு, சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை புறக்கணிக்கவில்லை என்பதையும் அமைச்சர் விளக்கினார்.

இந்த குழுவினர் கண்டறியக்கூடிய புத்தாக்கங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் “My Digital Justice“க்கான திட்டவரைவை உருவாக்க பயன்படும் என அஸாலினா நம்பிக்கைத் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டில், இலக்கவியல் அமைச்சு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சு உட்பட அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் சட்டத் துறைக்கான `My Digital Justice“ திட்ட வரைவை அரசாங்கம் தொடங்கும் என்பதையும் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது அஸாலினா ஓத்மான் இதனை குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்