கோலாலம்பூர், நவ. 14-
செயற்கை நுண்ணறிவான AI ஐ, தொழில்நுட்பத்தை சட்டத் துறையில் பயன் படுத்துவதற்கு இன்னும் ஆழமாக ஆய்வு மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஒரு கூட்டுக் குழுவை அமைத்துள்ளதாக சட்டத்துறை தலைவர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் தெரிவித்தார்.
கூட்டரசு நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகத்துடன் நிறுவப்பட்ட இக்குழு, சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை புறக்கணிக்கவில்லை என்பதையும் அமைச்சர் விளக்கினார்.
இந்த குழுவினர் கண்டறியக்கூடிய புத்தாக்கங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் “My Digital Justice“க்கான திட்டவரைவை உருவாக்க பயன்படும் என அஸாலினா நம்பிக்கைத் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டில், இலக்கவியல் அமைச்சு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சு உட்பட அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் சட்டத் துறைக்கான `My Digital Justice“ திட்ட வரைவை அரசாங்கம் தொடங்கும் என்பதையும் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது அஸாலினா ஓத்மான் இதனை குறிப்பிட்டார்.








