Dec 22, 2025
Thisaigal NewsYouTube
தேர்தலுக்காக எஸ்.ஓ.பி நடைமுறைகள்
அரசியல்

தேர்தலுக்காக எஸ்.ஓ.பி நடைமுறைகள்

Share:

அடுத்த மாதம் 12 ஆம் தேதி ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் மற்றும் கோல திரங்கானு நாடாளுமன்ற இடைதேர்தல் ஆகியவற்றை முன்னிட்டு கோவிட் 19 தடுப்பிற்கு கடைப்பிடிக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட எஸ்.ஓ.பி நடைமுறைகளை சுகாதார அமைச்சு அறிவிக்கவிருப்பதாக அதன் அமைச்சர் டாக்டர். ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட எஸ்.ஓ.பி நடைமுறைகளை மேம்ப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு விரைவில் தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர் -ரை சந்திக்க விருப்பதாக அமைச்சர் டாக்டர். ஜாலிஹா முஸ்தபா குறிப்பிட்டார்.

இந்த எஸ்.ஓ.பி நடைமுறைகள் குறித்து, வாக்களிப்புத் தினத்திற்கு முன்னதாகவே கலந்து ஆலோசிக்கப்பட்டு, முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.

கிளந்தான், கோத்தாபாருவில், மாநில சுகாதார இலாகாவின் சிறந்த சேவைக்கான விருதளிப்பு நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டாக்டர். ஜாலிஹா முஸ்தபா இதனை தெரிவித்தார்.

இன்னும் இரண்டு மூன்று தினங்களில் தேர்தலுக்கான எஸ்.ஓ.பி நடைமுறைகள் தீர்க்கமாக முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு