Apr 24, 2026
Thisaigal NewsYouTube
முகைதீனுக்கு எதிரான விசாரணையில் தலையிட்டேனா? பிரதமர் மறுப்பு
அரசியல்

முகைதீனுக்கு எதிரான விசாரணையில் தலையிட்டேனா? பிரதமர் மறுப்பு

Share:

புத்ராஜெயா,ஆகஸ்ட் 23-

பேரிக்காதான் நசியனால் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் எதிர்நோக்கி வரும் விசாரணையில் தாம் தலையிட்டதாக கூறப்படுவதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வன்மையாக மறுத்துள்ளார்.

நாட்டில் அமல்படுத்தப்பட்டு வரும் நடப்பு சட்டங்களுக்கு ஏற்ப இவ்விவகாரத்தை சட்டத்துறை அலுவலகத்திடமே தாம் விட்டு விட்டதாக பிரதமர் விளக்கினார்.

இது போன்ற விசாரணைகளில் தாம் என்றுமே தலையிட்டதில்லை என்றும், தலையிடப் போவதில்லை என்றும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.

உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச்செலவின அமைச்சின் அமலாக்க அதிகாரிகளுடன் AMANAT நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் பிரதமராகுவதற்கு சத்தியப்பிரமாண பிரகடன் மூலம் தாம் போதுமான ஆதரவை கொண்டு இருந்ததாக கிளந்தான்,நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முகைதீன் யாசின் உரையாற்றியிருந்தார்.

அந்த உரை, முன்னாள் மாமன்னரான பகாங் சுல்தானை தொடர்பு படுத்துவதாக உள்ளது என்று கூறி, சர்ச்சைக்கு இடமானது.

இந்த சர்ச்சையை தொடர்ந்து முகைதீனை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் தற்போது விசாரணை செய்து வருவது குறித்து கருத்துரைக்கையில் டத்தோஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!