Jul 18, 2026
Thisaigal NewsYouTube
ஜேஎஸ்-எஸ்இஇசட் விவகாரம்: பிரதமர் அன்வர் கருத்துக்கு ஓன் ஹஃபிஸ் மறுப்பு
அரசியல்

ஜேஎஸ்-எஸ்இஇசட் விவகாரம்: பிரதமர் அன்வர் கருத்துக்கு ஓன் ஹஃபிஸ் மறுப்பு

Share:

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் புளூபிரிண்ட் செயல்திட்ட அறிக்கை மலேசிய அரசாங்கத்தின் ஆவணமாகும் என்றும், அதனைத் தொடங்குவதற்குச் சிங்கப்பூரின் ஒப்புதல் தேவையில்லை என்றும் ஜோகூர் பாரிசான் நேஷனல் தலைவர் ஓன் ஹஃபீஸ் காசி தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் அரசாங்கத்துடன் தேவையான ஆலோசனைகள் ஏற்கனவே நடத்தப்பட்டுவிட்டதாகவும், இனி புத்ராஜெயா இதனை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவது மட்டுமே பாக்கி என்றும் ஜோகூர் மந்திரி பெசார் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாட்டுப் பிரதமர்களும் நேரில் சந்தித்து இந்தத் திட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறுவது தவறான தகவல், அது மக்களைத் தவறாக வழிநடத்தும் என்று ஓன் ஹஃபிஸ் காசி தனது அறிக்கையில் கடுமையாக சாடியுள்ளார்.

ஜேஎஸ்-எஸ்இஇசட் செயல்திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து தாமதப்படுத்தி வருவதாக ஓன் ஹஃபீஸ் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்த ஆண்டின் நான்காம் காலாண்டிற்குள் இது தொடங்கப்படும் என்று பொருளாதார அமைச்சர் அக்மல் நசீர் விளக்கமளித்துள்ளார். இதற்கிடையே, வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான பிரச்சாரப் பொருளாக இந்த விவகாரத்தை ஓன் ஹஃபீஸ் பயன்படுத்துவது புத்திசாலித்தனமானது அல்ல என்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் விமர்சித்துள்ளார்.

Related News

நெகிரி மாநிலத் தேர்தல் முடிவு 16-ஆவது பொதுத்தேர்தல் கூட்டணியைத் தீர்மானிக்கும்: ஜாஹிட் அறிவிப்பு

நெகிரி மாநிலத் தேர்தல் முடிவு 16-ஆவது பொதுத்தேர்தல் கூட்டணியைத் தீர்மானிக்கும்: ஜாஹிட் அறிவிப்பு

வெற்றிக்காக மக்களின் நம்பிக்கையை பி.கே.ஆர், பக்காத்தான் ஹரப்பான் ஒருபோதும் அடகு வைக்காது: புசியா சலே கூறுகிறார்

வெற்றிக்காக மக்களின் நம்பிக்கையை பி.கே.ஆர், பக்காத்தான் ஹரப்பான் ஒருபோதும் அடகு வைக்காது: புசியா சலே கூறுகிறார்

மணிவண்ணனை வெற்றி பெற செய்ய வேண்டும்: துணை அமைச்சர் யுனேஸ்வரன் கோரிக்கை

மணிவண்ணனை வெற்றி பெற செய்ய வேண்டும்: துணை அமைச்சர் யுனேஸ்வரன் கோரிக்கை

லிங்கி சட்டமன்றத் தொகுதியில் புதிய துறைமுகம் மற்றும் தொழில் பேட்டை உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது

லிங்கி சட்டமன்றத் தொகுதியில் புதிய துறைமுகம் மற்றும் தொழில் பேட்டை உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது

அமினுடின் ஹருனின் சாதனை நிர்வாகத்தை முன்வைத்தே பிரச்சாரம்: ஜெம்பூலில் டத்தோஸ்ரீ ஃபாஹ்மி ஃபட்சில் அறிவிப்பு

அமினுடின் ஹருனின் சாதனை நிர்வாகத்தை முன்வைத்தே பிரச்சாரம்: ஜெம்பூலில் டத்தோஸ்ரீ ஃபாஹ்மி ஃபட்சில் அறிவிப்பு

ஜோகூர் மாநிலத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

ஜோகூர் மாநிலத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு