சிகாமட் நாடாளுமன்றத் தேர்தல் முடிவை எதிர்த்து , அத்தொகுதியில் போட்டியிட்ட பாரிசான் நேஷனல் வேட்பாளர் டான் ஶ்ரீ எம். ராமசாமி செய்து கொண்ட மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட புத்ராஜெயா , கூட்டரசு நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக முழு விசாரணை நடத்தும் படி தேர்தல் நீதி மன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி டத்தோ ஜபரியா முகமட் யூசோப் ஆணைப் பிறப்பித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் ஜொகூர் , சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற பிகேஆர் கட்சி வேட்பாளர் ஆர்.யுனேஸ்வரனின் வெற்றி செல்லுபடியாகாது என்று அறிவிக்கக் கோரி , அத்தொகுதியில் போட்டியிட்டவரும் , ம.இ.கா பொருளாளருமான டான் ஶ்ரீ எம். ராமசாமி இவ்வழக்கைத் தொடுத்துள்ளார்.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு


