சிகாமட் நாடாளுமன்றத் தேர்தல் முடிவை எதிர்த்து , அத்தொகுதியில் போட்டியிட்ட பாரிசான் நேஷனல் வேட்பாளர் டான் ஶ்ரீ எம். ராமசாமி செய்து கொண்ட மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட புத்ராஜெயா , கூட்டரசு நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக முழு விசாரணை நடத்தும் படி தேர்தல் நீதி மன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி டத்தோ ஜபரியா முகமட் யூசோப் ஆணைப் பிறப்பித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் ஜொகூர் , சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற பிகேஆர் கட்சி வேட்பாளர் ஆர்.யுனேஸ்வரனின் வெற்றி செல்லுபடியாகாது என்று அறிவிக்கக் கோரி , அத்தொகுதியில் போட்டியிட்டவரும் , ம.இ.கா பொருளாளருமான டான் ஶ்ரீ எம். ராமசாமி இவ்வழக்கைத் தொடுத்துள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


