சிகாமட் நாடாளுமன்றத் தேர்தல் முடிவை எதிர்த்து , அத்தொகுதியில் போட்டியிட்ட பாரிசான் நேஷனல் வேட்பாளர் டான் ஶ்ரீ எம். ராமசாமி செய்து கொண்ட மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட புத்ராஜெயா , கூட்டரசு நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக முழு விசாரணை நடத்தும் படி தேர்தல் நீதி மன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி டத்தோ ஜபரியா முகமட் யூசோப் ஆணைப் பிறப்பித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் ஜொகூர் , சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற பிகேஆர் கட்சி வேட்பாளர் ஆர்.யுனேஸ்வரனின் வெற்றி செல்லுபடியாகாது என்று அறிவிக்கக் கோரி , அத்தொகுதியில் போட்டியிட்டவரும் , ம.இ.கா பொருளாளருமான டான் ஶ்ரீ எம். ராமசாமி இவ்வழக்கைத் தொடுத்துள்ளார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்


