சிகாமட் நாடாளுமன்றத் தேர்தல் முடிவை எதிர்த்து , அத்தொகுதியில் போட்டியிட்ட பாரிசான் நேஷனல் வேட்பாளர் டான் ஶ்ரீ எம். ராமசாமி செய்து கொண்ட மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட புத்ராஜெயா , கூட்டரசு நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக முழு விசாரணை நடத்தும் படி தேர்தல் நீதி மன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி டத்தோ ஜபரியா முகமட் யூசோப் ஆணைப் பிறப்பித்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் ஜொகூர் , சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற பிகேஆர் கட்சி வேட்பாளர் ஆர்.யுனேஸ்வரனின் வெற்றி செல்லுபடியாகாது என்று அறிவிக்கக் கோரி , அத்தொகுதியில் போட்டியிட்டவரும் , ம.இ.கா பொருளாளருமான டான் ஶ்ரீ எம். ராமசாமி இவ்வழக்கைத் தொடுத்துள்ளார்.

Related News

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு


