Mar 5, 2026
Thisaigal NewsYouTube
அரசியல்

பாதுகாப்புப் படைகள் எப்போதும் விழிப்புடன் இருப்பதாக உள்துறை அமைச்சு உறுதியளித்துள்ளது

Share:

நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதில் பாதுகாப்புப் படைகள் எப்போதும் விழிப்புடன் இருப்பதாக உள்துறை அமைச்சு உறுதியளித்துள்ளது. ரோஹிங்கியா அகதிகளின் வருகை அதிகரித்துள்ளதால், மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் நாட்டின் கடற்பரப்பில் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றி வரும் படகுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். மியான்மரில் உள்ள அரசியல் குழப்பமும் மோசமான வாழ்க்கைச் சூழலும் ரோஹிங்கியா மக்கள் மலேசியாவுக்கு இடம்பெயர்வதற்கான முக்கிய காரணிகளாகும் என்றார். மலேசியாவின் அமைதியான அரசியல் சூழலும் பல கலாச்சார சமூகமும் அவர்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிப்பதாகத் தெரிவித்தார்.

இலாங்காவியில் ரோஹிங்கியா அகதிகள் தரையிறங்கிய சம்பவத்தை அடுத்து, அவர்களைக் குடிநுழைவு தடுப்பு மையத்தில் தங்க வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசியா மாந்தநேய அணுகுமுறையுடன் இந்த விவகாரத்தைக் கையாண்டு வருகிறது. அதே நேரத்தில், நாட்டின் கடல் எல்லைகளில் கடுமையான பாதுகாப்பும் கட்டுப்பாடும் பேணப்படுகிறது. நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதே முக்கிய நோக்கம் என்று Saifuddin தெரிவித்தார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு