Apr 23, 2026
Thisaigal NewsYouTube
அரசியல்

பாதுகாப்புப் படைகள் எப்போதும் விழிப்புடன் இருப்பதாக உள்துறை அமைச்சு உறுதியளித்துள்ளது

Share:

நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதில் பாதுகாப்புப் படைகள் எப்போதும் விழிப்புடன் இருப்பதாக உள்துறை அமைச்சு உறுதியளித்துள்ளது. ரோஹிங்கியா அகதிகளின் வருகை அதிகரித்துள்ளதால், மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் நாட்டின் கடற்பரப்பில் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றி வரும் படகுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். மியான்மரில் உள்ள அரசியல் குழப்பமும் மோசமான வாழ்க்கைச் சூழலும் ரோஹிங்கியா மக்கள் மலேசியாவுக்கு இடம்பெயர்வதற்கான முக்கிய காரணிகளாகும் என்றார். மலேசியாவின் அமைதியான அரசியல் சூழலும் பல கலாச்சார சமூகமும் அவர்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிப்பதாகத் தெரிவித்தார்.

இலாங்காவியில் ரோஹிங்கியா அகதிகள் தரையிறங்கிய சம்பவத்தை அடுத்து, அவர்களைக் குடிநுழைவு தடுப்பு மையத்தில் தங்க வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசியா மாந்தநேய அணுகுமுறையுடன் இந்த விவகாரத்தைக் கையாண்டு வருகிறது. அதே நேரத்தில், நாட்டின் கடல் எல்லைகளில் கடுமையான பாதுகாப்பும் கட்டுப்பாடும் பேணப்படுகிறது. நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதே முக்கிய நோக்கம் என்று Saifuddin தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

பாதுகாப்புப் படைகள் எப்போதும் விழிப்புடன் இருப்பதாக உள்து... | Thisaigal News