Dec 20, 2025
Thisaigal NewsYouTube
ஊராட்சி மன்ற வரியை தடாலடியாக உயர்த்தாதீர்
அரசியல்

ஊராட்சி மன்ற வரியை தடாலடியாக உயர்த்தாதீர்

Share:

நவ. 24-

மறு மதிப்பீடு செய்யப்பட்ட சொத்து வரி அதிகரிப்பு என்பது அவசரமாக இருக்கக்கூடாது, அது
மக்களின் நலனை கருத்தில் கொண்டு சுமையை அதிகரிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார் வீட்டுவசதி, உள்ளாட்சி மன்ற அமைச்சர், Nga Kor Ming.

சொத்து வரி உயர்வு படிப்படியாகவும் தற்போதைய பணவீக்கத்தை கருத்தில் கொண்டும் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, சொத்து வரி இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை 2 முதல் 5 விழுக்காடு வரை மட்டுமே உயர்த்தப்படலாம் என்றார்.

இந்த அணுகுமுறை பினாங்கில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது, இங்கு சிறிய, நிலையான உயர்வு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஈப்போவிலும் இதே போன்ற அணுகுமுறையை ஆய்வு செய்து பின்பற்றலாம் என்று தாம் நம்புவதாகவும் இதனால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும் ஙா கோர் மிங் கூறினார்.

கடந்த நவம்பர் 22 ஆம் தேதியன்று, ஈப்போ நகரின் பல குடிமக்கள் ஈப்போ மாநகராட்சி மன்றம் நடப்புக்குக்கொண்டு வர உள்ள 9 விழுக்காடு புதிய சொத்து வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதற்கிடையில், ஙா கோர் மிங் கூறுகையில், சொத்து வரி பிரச்சனை அண்மையில் நடைபெற்ற உள்ளூர் அரசாங்க தேசிய மாநாட்டில் எழுப்பப்பட்டதாகக் குறிப்பிட்டார். அரசின் கொள்கை தெளிவாக உள்ளது, இது மக்களுக்கான அரசு. அனைத்து எதிர்ப்புகளும் கருத்துகளும் நியாயமான முடிவு எடுக்கப்படுவதை உறுதி செய்ய ஆய்வு செய்யப்படும் என்று அவர் மேலும்ம் சொன்னார்.

Related News

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்

ஊராட்சி மன்ற வரியை தடாலடியாக உயர்த்தாதீர் | Thisaigal News