Mar 7, 2026
Thisaigal NewsYouTube
ஊராட்சி மன்ற வரியை தடாலடியாக உயர்த்தாதீர்
அரசியல்

ஊராட்சி மன்ற வரியை தடாலடியாக உயர்த்தாதீர்

Share:

நவ. 24-

மறு மதிப்பீடு செய்யப்பட்ட சொத்து வரி அதிகரிப்பு என்பது அவசரமாக இருக்கக்கூடாது, அது
மக்களின் நலனை கருத்தில் கொண்டு சுமையை அதிகரிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார் வீட்டுவசதி, உள்ளாட்சி மன்ற அமைச்சர், Nga Kor Ming.

சொத்து வரி உயர்வு படிப்படியாகவும் தற்போதைய பணவீக்கத்தை கருத்தில் கொண்டும் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, சொத்து வரி இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை 2 முதல் 5 விழுக்காடு வரை மட்டுமே உயர்த்தப்படலாம் என்றார்.

இந்த அணுகுமுறை பினாங்கில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது, இங்கு சிறிய, நிலையான உயர்வு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஈப்போவிலும் இதே போன்ற அணுகுமுறையை ஆய்வு செய்து பின்பற்றலாம் என்று தாம் நம்புவதாகவும் இதனால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும் ஙா கோர் மிங் கூறினார்.

கடந்த நவம்பர் 22 ஆம் தேதியன்று, ஈப்போ நகரின் பல குடிமக்கள் ஈப்போ மாநகராட்சி மன்றம் நடப்புக்குக்கொண்டு வர உள்ள 9 விழுக்காடு புதிய சொத்து வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதற்கிடையில், ஙா கோர் மிங் கூறுகையில், சொத்து வரி பிரச்சனை அண்மையில் நடைபெற்ற உள்ளூர் அரசாங்க தேசிய மாநாட்டில் எழுப்பப்பட்டதாகக் குறிப்பிட்டார். அரசின் கொள்கை தெளிவாக உள்ளது, இது மக்களுக்கான அரசு. அனைத்து எதிர்ப்புகளும் கருத்துகளும் நியாயமான முடிவு எடுக்கப்படுவதை உறுதி செய்ய ஆய்வு செய்யப்படும் என்று அவர் மேலும்ம் சொன்னார்.

Related News

சாஹிட்டின் அழைப்பை ஏற்று அம்னோவுக்குத் திரும்புகிறார் கைரி ஜமாலுதீன்

சாஹிட்டின் அழைப்பை ஏற்று அம்னோவுக்குத் திரும்புகிறார் கைரி ஜமாலுதீன்

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி