Jun 27, 2026
Thisaigal NewsYouTube
தராசு சின்னத்திற்கு ம.சீ.ச. வரவேற்பு
அரசியல்

தராசு சின்னத்திற்கு ம.சீ.ச. வரவேற்பு

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23-

வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாரிசான் நேஷனலின் அனைத்து கட்சிகளும் தராசு சின்னத்தையே பயன்படுத்த வேண்டும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி எடுத்துள்ள முடிவை மசீச வரவேற்றுள்ளது.

பாரிசான் நேஷனல் உறுப்புக்கட்சிகளும் அந்த விருப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் இன்று தனது நிலைப்பாட்டை அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மசீச தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் இன்று தொடங்கிய அம்னோ பேராளர் மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

வருகின்ற 16 ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் உறுப்புக்கட்சிகள் தராசு சின்னம் பயன்படுத்தப்படுவதை மசீச முழுமையாக வரவேற்பதாக டாக்டர் வீ கா சியோங் தெரிவித்தார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்