மலாக்கா மாநிலத்தில் முதலமைச்சர் வேட்பாளராக மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவரும், தஞ்சோங் பிடாரா சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் ரவுப் யூசோ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.
நாளை வெள்ளிக்கிழமை மலாக்கா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக அப்துல் ரவுப் யூசோ பதவி உறுதி மொழி எடுத்துக்கொள்வதற்கு ஏதுவாக அவரின் பெயர், மலாக்கா ஆளுநர் துன் அலி ருஸ்தாமிடம் சார்வு செய்யப்பட்டுள்ளதாக துணைப் பிரதமருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
மலாக்கா முதலமைச்சர் சுலைமான் அலி தமது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவி காலியானது. 61 வயதான அப்துல் ரவுப் யூசோ , மலாக்கா மாநிலத்தின் 13 ஆவது முதலமைச்சராக பதவியேற்கவிருக்கிறார்.

Related News

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து


