மலாக்கா மாநிலத்தில் முதலமைச்சர் வேட்பாளராக மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவரும், தஞ்சோங் பிடாரா சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் ரவுப் யூசோ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.
நாளை வெள்ளிக்கிழமை மலாக்கா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக அப்துல் ரவுப் யூசோ பதவி உறுதி மொழி எடுத்துக்கொள்வதற்கு ஏதுவாக அவரின் பெயர், மலாக்கா ஆளுநர் துன் அலி ருஸ்தாமிடம் சார்வு செய்யப்பட்டுள்ளதாக துணைப் பிரதமருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
மலாக்கா முதலமைச்சர் சுலைமான் அலி தமது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவி காலியானது. 61 வயதான அப்துல் ரவுப் யூசோ , மலாக்கா மாநிலத்தின் 13 ஆவது முதலமைச்சராக பதவியேற்கவிருக்கிறார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


