Apr 22, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் தேர்தலில் பேராளர்களை அச்சுறுத்துவதா?  உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினரின் கைத்துப்பாக்கி பறிக்கப்பட்டது
அரசியல்

பிகேஆர் தேர்தலில் பேராளர்களை அச்சுறுத்துவதா? உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினரின் கைத்துப்பாக்கி பறிக்கப்பட்டது

Share:

ஈப்போ, ஏப்ரல்.29-

பிகேஆர் கட்சியின் பேரா, உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராபாஃட் வாரிசாய் முகமட்டின் கைத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி தொகுதி அளவில் நடைபெற்ற பிகேஆர் தேர்தலில் தன்னிடம் உள்ள கைத்துப்பாக்கியைப் பொதுவில் காட்டி மக்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து விசாரணைக்கு வழிவிடும் வகையில் அந்த சட்டமன்ற உறுப்பினரின் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

போலீஸ் அனுமதிப் பெற்று, கைத்துப்பாக்கி வைத்திருக்கும் எந்தவொரு தனிநபரும், இது போன்ற விசாரணைக்கு ஆளாகுவார்களேயானால் எஸ்ஓபி நடைமுறைக்கு ஏற்ப அவர்களின் கைத்துப்பாக்கியைப் பறிமுதல் செய்வது வழக்கமான நடைமுறையாகும் என்று நோர் ஹிசாம் குறிப்பிட்டார்.

இந்நிலையில் உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதியை ரத்து செய்யும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நடவடிக்கைக்கு தாங்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதுடன், அவரின் கைத்துப்பாக்கி உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று நோர் ஹிசாம் தெரிவித்தார்.

இன்று ஈப்போவில், பேரா மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நோர் ஹிசாம் இதனைக் குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!