Aug 11, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் தேர்தலில் பேராளர்களை அச்சுறுத்துவதா?  உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினரின் கைத்துப்பாக்கி பறிக்கப்பட்டது
அரசியல்

பிகேஆர் தேர்தலில் பேராளர்களை அச்சுறுத்துவதா? உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினரின் கைத்துப்பாக்கி பறிக்கப்பட்டது

Share:

ஈப்போ, ஏப்ரல்.29-

பிகேஆர் கட்சியின் பேரா, உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராபாஃட் வாரிசாய் முகமட்டின் கைத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி தொகுதி அளவில் நடைபெற்ற பிகேஆர் தேர்தலில் தன்னிடம் உள்ள கைத்துப்பாக்கியைப் பொதுவில் காட்டி மக்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து விசாரணைக்கு வழிவிடும் வகையில் அந்த சட்டமன்ற உறுப்பினரின் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

போலீஸ் அனுமதிப் பெற்று, கைத்துப்பாக்கி வைத்திருக்கும் எந்தவொரு தனிநபரும், இது போன்ற விசாரணைக்கு ஆளாகுவார்களேயானால் எஸ்ஓபி நடைமுறைக்கு ஏற்ப அவர்களின் கைத்துப்பாக்கியைப் பறிமுதல் செய்வது வழக்கமான நடைமுறையாகும் என்று நோர் ஹிசாம் குறிப்பிட்டார்.

இந்நிலையில் உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதியை ரத்து செய்யும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நடவடிக்கைக்கு தாங்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதுடன், அவரின் கைத்துப்பாக்கி உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று நோர் ஹிசாம் தெரிவித்தார்.

இன்று ஈப்போவில், பேரா மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நோர் ஹிசாம் இதனைக் குறிப்பிட்டார்.

Related News

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது