Mar 6, 2026
Thisaigal NewsYouTube
துன் மகாதீருக்கு எதிராக குற்றவியல் விசாரணைக்கு பரிந்துரை
அரசியல்

துன் மகாதீருக்கு எதிராக குற்றவியல் விசாரணைக்கு பரிந்துரை

Share:

கோலாலம்பூர், டிச. 5-


ஜோகூர் கடற்பரப்பில் வீற்றிருக்கும் Batu Puteh பவளப்பாறைத் தீவு மற்றும் மிடல் ரோக்ஸ், சவுத் லெட்ஜ் ஆகிய தீவுகளின் இறையாண்மை தொடர்பாக அரச விசாரணை ஆணையத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் துன் மகாதீர் மீது குற்றவியல் விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று அந்த அரச ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

அனைத்துலக நீதிமன்றத்தினால் பத்து பூத்தே தீவு, சிங்கப்பூருக்கு சொந்தமானது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது உட்பட மேலும் இரண்டு தீவுகளின் இறையாண்மை குறித்து மீள் ஆய்வு செய்வதற்கும், பத்து பூத்தே தீவின் அரசுரிமை மலேசியாவிடமிருந்து பறிபோனதற்கும் காரணமாக இருந்த அம்சங்கள் மற்றும் காரணமானவர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் ஆழமான விசாரணை நடத்துவதற்கு மாமன்னரால் அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி துன் முகமட் ராவுஸ் ஷாரிப் தலைமையில் 7 ஆணையர்களை கொண்டு அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையம் மேற்கொண்ட விசாரணையில் ஏமாற்று வேலைகளினால் மலேசியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பத்து பூத்தே தீவை சிங்கப்பூரிடம் இழக்க வேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு மலேசியா இலக்காகியது என்று அரச விசாரணை ஆணையம் முடிவுக்கு வந்துள்ளது.

இதன் தொடர்பில் பத்து பூத்தே தீவை இழப்பதற்கு நாட்டின் பிரதமர் என்ற முறையில் காரணமாக இருந்த துன் மகாதீருக்கு எதிராக போலீஸ் புகார் செய்வது உட்பட அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு விசாரணையை தொடங்குவதற்கு அரச விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Related News

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை