Mar 7, 2026
Thisaigal NewsYouTube
தஜுடின் அப்துல் ரஹ்மான் மீண்டும் அம்னோவில் சேர்க்கப்பட்டார்
அரசியல்

தஜுடின் அப்துல் ரஹ்மான் மீண்டும் அம்னோவில் சேர்க்கப்பட்டார்

Share:

கோலாலம்பூர், நவ. 26-


சர்ச்சைக்குரிய அரசியல்வாதியும் பேரா, பாசீர் சலாக் அம்னோ டிவிஷனின் முன்னாள் தலைவருமான தஜுடின் அப்துல் ரஹ்மானுக்கு விதிக்கப்பட்டிருந்த 6 ஆண்டு இடை நீக்கத் தடையை அம்னோ உச்சமன்றம் நேற்று அகற்றியது.

எல்ஆர்டி ரயில் சேவையை வழிநடத்தி வரும் பிரசரன்னா நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான தஜுடின் அப்துல் ரஹ்மான், இடை நீக்கம் அகற்றப்பட்டு, அவரின் உறுப்பினர் தகுதி, உடனடியாக அமலுக்கு வருவதாக அம்னோ உச்சமன்றம் முடிவு செய்துள்ளது என்று கட்சியின் பொதுச் செயலாளர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி தெரிவித்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியின் தலைமைத்துவத்தை கடுமையாக விமர்ச்சித்து அ றிக்கை வெளியிட்டதற்காக கட்சியிலிருந்து தஜுடின் 6 ஆண்டு காலத்திற்கு இடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஜாஹிட் ஹமிடியின் தலைமைத்துவத்திற்கு எதிராக செயல்பட்ட அம்னோ முன்னாள் உதவித் தலைவர் ஹிஷாமுடின் துன் ஹுசேன் உட்பட கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ஐந்து முக்கிய தலைவர்களில் தஜுடினும் ஒருவர் ஆவார்.

டான்ஸ்ரீ முகைதீன் யாசின் நாட்டின் பிரதமராக இருந்த போது, பிரசாரன்னா தலைவராக பதவி வகித்த தஜுடின், கோலாலம்பூர், கேஎல்சிசி- க்கும், கம்போங் பாருவிற்கு இடையில் இரண்டு எல்.ஆர்.டி. ரயில்கள் மோதிக்கொண்டு, 47 பயணிகள் கடும் காயத்திற்கு ஆளான விபத்தை, இரண்டு ரயில்கள் முத்தமிட்டுக்கொண்டன என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கிண்டலாக வர்ணித்ததற்காக அவர், அந்த ரயில் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

Related News

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் 3 கோடி 60 லட்சம் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் 3 கோடி 60 லட்சம் ரிங்கிட் லாபத்தை ஈட்டியுள்ளது

பெரிக்காத்தான் கூட்டணியில் நான் இணைந்து விட்டால் முகைதீன் பதவி விலகத் தயாரா? / எதிர்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன் கேள்வி

பெரிக்காத்தான் கூட்டணியில் நான் இணைந்து விட்டால் முகைதீன் பதவி விலகத் தயாரா? / எதிர்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன் கேள்வி

பாங்காக்கில் நடந்த எந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை - சம்சூரி திட்டவட்டம்

பாங்காக்கில் நடந்த எந்த ஒரு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை - சம்சூரி திட்டவட்டம்

கியான்டி, எர்மியாதியிடம் விளக்கம் கேட்டு பெர்சாத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம்

கியான்டி, எர்மியாதியிடம் விளக்கம் கேட்டு பெர்சாத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழு கடிதம்

சாஹிட்டின் அழைப்பை ஏற்று அம்னோவுக்குத் திரும்புகிறார் கைரி ஜமாலுதீன்

சாஹிட்டின் அழைப்பை ஏற்று அம்னோவுக்குத் திரும்புகிறார் கைரி ஜமாலுதீன்

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

தஜுடின் அப்துல் ரஹ்மான் மீண்டும் அம்னோவில் சேர்க்கப்பட்டார் | Thisaigal News