ஜோகூர் பாரு, ஜூலை.12-
ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கூடாய் தொகுதியில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி ஜெயபாலன் அபார வெற்றி பெற்றுத் தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
ஒரு வழக்கறிஞரான கார்த்தியாயினிக்கு 39 ஆயிரத்து 821 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மசீச.வை சேர்ந்த பாரிசான் நேஷனல் வேட்பாளர் நிகோல் டான் ஹியாங் கீ-ற்கு 25 ஆயிரத்து 541 வாக்குகளும் கிடைத்தன.
ஸ்கூடாய் தொகுதியில் பாரிசான் நேஷனல் கூட்டணியுடன், பெர்சாமா பிஎஸ்எம் என இரு கட்சிகளும் போட்டியிட, கார்த்தியாயினி நான்கு முனையைப் போட்டியை எதிர்நோக்கியிருந்தார்.
இந்நிலையில், 15 ஆயிரத்து 280 வாக்குகள் பெரும்பான்மையில், கார்த்தியாயினி அபார வெற்றி பெற்றுள்ளார்.








