நெகிரி செம்பிலான் யாங் டி-பெர்துவான் பெசார் பதவியிலிருந்து துங்கு முஹ்ரிஸ் துங்கு முனாவீர் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் நடவடிக்கை முறையற்றது மற்றும் விகிதாச்சாரமற்றது என்று முன்னாள் சட்டதுறை அமைச்சர் சையத் இப்ராஹிம் விமர்சித்துள்ளார்.
தீவிரமான முறைகேடு அல்லது கடமை தவறிய நிகழ்வுகளின் போது ஒரு ஆட்சியாளரை நீக்குவதற்கு அரசமைப்பில் வழிமுறைகள் இருந்தாலும், துங்கு முஹ்ரிஸ் என்ன தவறு செய்தார் என்பது பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மலாக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் நான்கு 'உண்டாங்'களால் துங்கு நட்சருதீன் புதிய ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. எனினும், பிரதமர் அன்வார் இப்ராஹிம் துங்கு முஹ்ரிஸே நெகிரி செம்பிலானின் முறையான ஆட்சியாளராக நீடிக்கிறார் என்றும், இப்பிரச்சினை சரியான வழிகளில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.








