ஒவ்வொரு காலகட்டத்திலும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வெளியிட்டு வருகின்ற சினமூட்டும் அறிக்கையினால் முஸ்லிம் அல்லாதவர்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாக இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோவ் தெரிவித்துள்ளார். முஸ்லிம் அல்லாதவர்களை இலக்காக கொண்டு அரசியல் சதுரங்க ஆட்டத்தை முன்னெடுத்துள்ள அப்துல் ஹாடி அவாங்,இனவாதத்தை முன்நிறுத்தி, பச்சை அலையை ஏற்படுத்த முற்படுகிறார் என்று சிகாம்புட் எம்.பி.யுமான ஹன்னா யோவ் குறிப்பிட்டார். காலம் சென்ற மத குரு, நிக் அப்துல் அஜீஸ், பாஸ் கட்சிக்கு தலைமையேற்றிருந்த போது பாஸ் கட்சியைக் கண்டு முஸ்லிம் அல்லாதவர்கள் அஞ்சியது கிடையாது. ஆனால், அப்துல் ஹாடி அவாங், பாஸ் கட்சிக்கு தமையேற்றப்பின்னர் அக்கட்சியை கண்டு மக்கள் அஞ்சிகின்றனர். ஹாடி அவாங்கின் ஒவ்வொரு அறிக்கையும் முஸ்லிம் அல்லாதவர்களின் மனங்களில் இடியாய் இறங்கியிருப்பதை மக்கள் மறந்து விட வில்லை என்று ஹன்னா இயோ குறிப்பிட்டார். பாஸ் கட்சி, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மிரட்டல் இல்லை என்று அதன் முக்கியத் தலைவர் கூறியிருப்பது தொடர்பில் ஹன்னா இயோ எதிர்வினையாற்றினார்.

Related News

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்


