பினாங்கு, பாயா தெருபோங் கில் உள்ள செரி ரெலாவ் தேசியப்பள்ளி வாக்களிப்பு மையத்தில் வாக்குப்பெட்டியில் சீல் வைக்கப்படாதது கண்டு பிடிக்கப்பட்டதால், காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டது. எனினும் வாக்குப்பெட்டி சீல் வைக்கப்பட்ட பின்னர் மிக தாமதமாக பிற்பகல் 1.26 மணியளவில் மறுபடியும் வாக்களிப்பு ஆரம்பமானது. காலையில் வைக்கப்பட்ட அந்த வாக்குப்பெட்டியில் ஏற்கனவே 177 வாக்குகள் செலுத்தப்பட்டப்பின்னரே அந்த வாக்குப்பெட்டியில் சீல் வைக்கப்படவில்லை என்பதை பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் ஓய் நெய் ஒன்ன் கண்டுபிடித்தார்.
சீல் வைக்கப்படாத பெட்டிக்குள் போடப்பட்ட 177 வாக்குகளை தாம் அங்கீகரிக்க இயலாது என்று அந்த வேட்பாளர் தமது ஆட்சேபத்தை தெரிவித்ததுடன், வாக்களிப்பை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து வாக்களிப்பை தேர்தல் ஆணையம் நிறுத்தியது. அந்த வாக்களிப்பு மைய வழித்தடத்தில் 719 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு பதிவு செய்யப்பட்டு இருந்தனர். அந்த வாக்குப்பெட்டியின் சீல் கழன்று, அருகில் உள்ள மற்றொரு பெட்டிக்கு அருகில் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. எனினும் சீல் வைக்கப்படாத பெட்டிக்குள் ஏற்கனவே போடப்பட்ட அந்த 177 வாக்குகள் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்


