Oct 16, 2025
Thisaigal NewsYouTube
அன்வாருடன் எந்த ஒப்பந்தமும் இல்லை – ஸாஃப்ருல் மறுப்பு!
அரசியல்

அன்வாருடன் எந்த ஒப்பந்தமும் இல்லை – ஸாஃப்ருல் மறுப்பு!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.05-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் எதிர்வரும் 16வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று முதலீடு, வர்த்தகம், தொழிலியல் அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அஸிஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பி.கே.ஆர் கட்சியில் இணைந்த பிறகு, அடுத்த தேர்தலில் அம்பாங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக எழுந்த வதந்திகளை அவர் "வெற்று அரட்டைகள்" என்று நிராகரித்துள்ளார்.

அரசியலில் 100 விழுக்காடு ஆதரவைப் பெறுவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தேதான் கட்சியில் இணைந்ததாகவும், எதிர்ப்புகளைச் சந்திக்கத் தயார் என்றும் ஸாஃப்ருல் துணிச்சலாகக் கூறியுள்ளார். தான் 20 ஆண்டுகள் அம்னோவில் இருந்ததாகவும், "காரணமில்லாமல் கட்சித் தாவவில்லை" என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Related News

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

வேதமூர்த்தியின் வழக்கு மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி அன்வார் வழக்கு மனு

வேதமூர்த்தியின் வழக்கு மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி அன்வார் வழக்கு மனு

பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியைக் கைப்பற்றுமானால் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் உதவித் தொகை

பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியைக் கைப்பற்றுமானால் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் உதவித் தொகை