சிலாங்கூர் சுல்தான் ஷராப்புடீன் இட்ரிஸ் ஷாவை தாம் நிந்தித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை கெடா மாநில மந்திரி புசாரும், பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான முகமட் சனூசி முகமட் நூர் மறுத்துள்ளார்.
தாம் ஆற்றிய உரை திரிக்கப்பட்டுள்ளதாக சனூசி நூர் குறிப்பிட்டுள்ளார்.சிலாங்கூர் சுல்தானை நிந்தித்ததாக கூறி சனூசிக்கு எதிராக நாடு தழுவிய நிலையில் 31 போலீஸ் புகார்கள் பதிவாகியுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
தற்போது புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் விசாரணைக்கு ஆளாகியுள்ள சனூசி நூரிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டுள்ளா்.
எனினும் , தமது அரசியல் வாழ்க்கையை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்காக சில தரப்பினர் தமக்கு எதிராக தமது உரையை திரித்துள்ளதாக சனூசி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


