சிலாங்கூர் சுல்தான் ஷராப்புடீன் இட்ரிஸ் ஷாவை தாம் நிந்தித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை கெடா மாநில மந்திரி புசாரும், பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான முகமட் சனூசி முகமட் நூர் மறுத்துள்ளார்.
தாம் ஆற்றிய உரை திரிக்கப்பட்டுள்ளதாக சனூசி நூர் குறிப்பிட்டுள்ளார்.சிலாங்கூர் சுல்தானை நிந்தித்ததாக கூறி சனூசிக்கு எதிராக நாடு தழுவிய நிலையில் 31 போலீஸ் புகார்கள் பதிவாகியுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
தற்போது புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் விசாரணைக்கு ஆளாகியுள்ள சனூசி நூரிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டுள்ளா்.
எனினும் , தமது அரசியல் வாழ்க்கையை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்காக சில தரப்பினர் தமக்கு எதிராக தமது உரையை திரித்துள்ளதாக சனூசி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


