Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: பாதுகாப்புப் பணியில் 4,788 போலீசார் தீவிரம்
அரசியல்

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: பாதுகாப்புப் பணியில் 4,788 போலீசார் தீவிரம்

Share:

வரும் ஆகஸ்ட் முதல் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் பொது அமைதியைப் பேண 4,788 போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் களமிறக்கப்படவுள்ளதாக மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமது தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்துடன் இணைந்து விரிவான பாதுகாப்புப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், முன்கூட்டியே வாக்களிக்கும் முறைக்காக 1,796 போலீசார் பிரத்யேகமாகப் பணியமர்த்தப்படுவர் என்றார்.

தொடர்ந்து பேசிய டத்தோ அல்சாஃப்னி அகமது, மாநிலத்தின் 5 மாவட்டங்களில் உள்ள 26 பகுதிகள் ‘ பதற்றம் நிறைந்த பகுதிகள்’ என அடையாளம் காணப்பட்டு, அங்கு கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அரசியல் கட்சி ஆதரவாளர்கள் வதந்திகளையோ, ஆத்திரமூட்டும் செயல்களையோ தவிர்க்க வேண்டும் என்றும், ஏதேனும் விதிமீறல்கள் நடந்தால் பொதுமக்கள் உடனடியாக 999 அவசரத் தொலைபேசி எண் அல்லது போலீஸ் கட்டுப்பாட்டு மையமான 06-7619999 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் டத்தோ அல்சாஃப்னி அகமது கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

அரண்மனையை அரசியலில் இழுப்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை: அமினுடின் ஹாரூன் எச்சரிக்கை

அரண்மனையை அரசியலில் இழுப்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை: அமினுடின் ஹாரூன் எச்சரிக்கை

சுமார் ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு திட்டம்: வீரப்பன் கூறுகிறார்

சுமார் ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு திட்டம்: வீரப்பன் கூறுகிறார்

சென்னா தொகுதியில் அந்தோனி லோக் கடும் சவாலை எதிர்கொள்வார் - ஓங் கியான் மிங் பகுப்பாய்வு

சென்னா தொகுதியில் அந்தோனி லோக் கடும் சவாலை எதிர்கொள்வார் - ஓங் கியான் மிங் பகுப்பாய்வு

இனவாத மற்றும் மத அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும் - சிம் டி ஸின் வலியுறுத்தல்

இனவாத மற்றும் மத அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும் - சிம் டி ஸின் வலியுறுத்தல்

 நெகிரி செம்பிலான் அரச பரிபாலன விவகாரம்: ஜசெக மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலிஸ் நிலையத்தில் புகார்

நெகிரி செம்பிலான் அரச பரிபாலன விவகாரம்: ஜசெக மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலிஸ் நிலையத்தில் புகார்

பிரித்தாளும் வெளிப்புற சக்திகளை புறந்தள்ளி, கூட்டு வலிமைக்கு முன்னுரிமை கொடுத்து சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும்: நெகிரி செம்பிலான் மாநில இந்திய சமூகத்திற்கு டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் அறிவுறுத்தல்!

பிரித்தாளும் வெளிப்புற சக்திகளை புறந்தள்ளி, கூட்டு வலிமைக்கு முன்னுரிமை கொடுத்து சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும்: நெகிரி செம்பிலான் மாநில இந்திய சமூகத்திற்கு டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் அறிவுறுத்தல்!