ஆறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி சார்பில் போட்டியிடுகின்ற அனைவரும் தமது வேட்பாளர்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரகடன்படுத்தியுள்ளார். பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள், பாரிசான் நேஷனல் வேட்பாளர்கள் என்ற பிரித்தாளும் நிலையின்றி அனைவருமே ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர்கள் என்று நேற்றிரவு கோலத்திரெங்கானு, குவால பெராங்கில் நிகழ்த்திய மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்தார். பக்காத்தான் ஹராப்பானுக்கும், பாரிசான் நேஷனலுக்கும் இடையிலான கருத்திணக்கம், மத்திய அரசாங்க அளவிலான தலைமைத்துவத்தை தொடர்ந்து நிலைநிறுத்தும் என்பதையும் பிரதமர் தமது உரையில் உறுதி அளித்தார். போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் வேட்பாளர்கள் என்பதால் இரு கூட்டணி சார்பில் தாமும், பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியும் தேர்தல் களத்தில் இறங்கி, பிரச்சாரம் செய்து வருவதாக அன்வார் குறிப்பிட்டார.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


