May 13, 2026
Thisaigal NewsYouTube
மஇகா இன்னும் பாரிசான் கூட்டணியில் தான் உள்ளது – ஸாமிர் உறுதி
அரசியல்

மஇகா இன்னும் பாரிசான் கூட்டணியில் தான் உள்ளது – ஸாமிர் உறுதி

Share:

கோத்தா கினபாலு, ஜனவரி.22-

மஇகா கட்சியானது இன்னும் பாரிசான் நேஷனல் கூட்டணியில் உள்ளதாக பாரிசான் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஸாம்ரி அப்துல் காடீர் தெரிவித்துள்ளார்.

கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து மஇகா தரப்பிலிருந்து, பாரிசனுக்கு எந்த ஒரு அதிகாரப்பூர்வக் கடிதமும் அனுப்பப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ள ஸாம்ரி, கூட்டணியில் இருந்து மஇகா விலகி விட்டதாகக் கூறும் செய்திகளில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை, மக்கள் முற்போக்குக் கட்சியான PPP-ஐ, மீண்டும் பாரிசான் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைக்கும் உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த ஸாம்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதே வேளையில், உச்சமன்ற கூட்டத்தில் மஇகா தலைவர்கள் கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஸாம்ரி, உச்ச மன்ற கூட்டமானது குறைந்த கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதால் மஇகாவின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவில்லை என்று தெரிவித்தார்.

முன்னதாக, பாரிசான் கூட்டணியில் இருந்து மஇகா விலகி விட்டதாகவும், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி