Aug 11, 2026
Thisaigal NewsYouTube
ஆயர் கூனிங் இடைத் தேர்தல்: இனவாதத்தை மக்கள் விரும்பவில்லை
அரசியல்

ஆயர் கூனிங் இடைத் தேர்தல்: இனவாதத்தை மக்கள் விரும்பவில்லை

Share:

சண்டாகான், ஏப்ரல்.27-

பேரா, ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றி பெற்றது எதிர்க்கட்சிகளின் இனவாத பிரச்சாரத்தை மக்கள் நிராகரித்ததாக பிகேஆர் தகவல் தொடர்புத் தலைவர் பாஃமி பாஃட்சீல் கூறினார். நேற்று நடைபெற்ற மும்முனைப் போட்டியில், பாரிசான் நேஷனல் வேட்பாளர் முகமட் யுஸ்ரி பாகீர் 5,006 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது 2022 பொதுத் தேர்தலில் அந்த கூட்டணி பெற்ற 2,213 வாக்குகள் வித்தியாசத்தை விட இரு மடங்கு அதிகமாகும். பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் அப்துல் முஹைமின் மாலேக் 6,059 வாக்குகளைப் பெற்றார். மலேசிய சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.எஸ். பவானி 1,106 வாக்குகளை மட்டுமே பெற்றார்.


அதிக வாக்கு வித்தியாசத்தில் கிடைத்த இந்த வெற்றி, மடானி அரசாங்கத்தின் முயற்சிகளுக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றும், வாக்காளர்கள் பிளவை விரும்பவில்லை என்பதையும் காட்டுவதாக தகவல் தொடர்பு அமைச்சராகவும் இருக்கும் பாஃமி தெரிவித்தார்.

தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சரிந்த நிலையில், ஆளும் கூட்டணி 19 வாக்குப்பதிவு மையங்களில் வெற்றி பெற்றது. இது ஆரோக்கியமான பரப்புரை நடவடிக்கையின் விளைவு என்றும், இனவாதத்தை மக்கள் புறக்கணிப்பதாகவும் பாஃமி தெரிவித்தார். இந்த வெற்றி ஒரு நல்ல அறிகுறியாக இருந்தாலும், வரவிருக்கும் சபா தேர்தலை எதிர்கொள்ள தொடர்ந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related News

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது