Jun 28, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமை அரசாங்கத்திற்கு கூடுதல் ஆதரவு கிடைக்க வேண்டுமென்றால் சனுசி அதிகமாக பேச வேண்டும்
அரசியல்

ஒற்றுமை அரசாங்கத்திற்கு கூடுதல் ஆதரவு கிடைக்க வேண்டுமென்றால் சனுசி அதிகமாக பேச வேண்டும்

Share:

கெடா, ஏப்ரல் 24-

ஒற்றுமை அரசாங்கத்திலுள்ள கட்சிகளிடையே உள்ள பிளவுகளைப் பெரிதாக்க உறுதி பூண்டுள்ள கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முஹம்மது சனுசி முகமட் நோரின் கூற்றை, அமானா கட்சியின் தேர்தல் பிரிவு இயக்குநர் முகமது சானி ஹம்சான் கடுமையாக சாடினார்.

சனுசி முகமட் நோர் பேசுவதில் வல்லவரே தவிர, செயலில் அல்ல. பேசுவதற்கு எவ்வித கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்பதால் அவரது விருப்பத்திற்கு ஏற்ப, எதுவேண்டுமானாலும் பேசலாம் என நினைத்திருக்கிறார் போல என்று முகமது சானி தெரிவித்தார்.

ஒவ்வொரு முறையும் சனுசி முகமட் நோர் ஒற்றுமை அரசாங்கத்திற்கு எதிராக பேசும்போது, பெர்சத்து கட்சியிலிருந்து ஒரு மக்கள் பிரதிநிதி பிரதமருக்கு ஆதரவை வெளிப்படுத்துகின்றனர். இதுவரையில் எழுவர் பிரதமருக்கு தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அவரது பேச்சுகள் நிச்சயமாக ஒற்றுமை அரசாங்கத்திற்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் மக்களின் ஆதரவை அதிகப்படுத்தித் தருகின்றன. ஆகையால், அவர் அதிகம் பேச வேண்டும் என்பதே தமது விருப்பம் என சானி ஹம்சான் கேலியாக கூறினார்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி