Mar 11, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சர் சிவகுமார் விடுப்பில் செல்ல வேண்டும், PKR எம்.பி. வலியுறுத்து
அரசியல்

அமைச்சர் சிவகுமார் விடுப்பில் செல்ல வேண்டும், PKR எம்.பி. வலியுறுத்து

Share:

லஞ்ச ஊழல் தொடர்பில் தமக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மின் விசாரணை முடியும் வரையில் மனித வள அமைச்சர் வி. சிவகுமார் விடுப்பில் செல்ல வேண்டும் என்று Pasir Gudang எம்.பி.யும், சட்ட வல்லுநருமான Hassan Abdul Karim கோரிக்கை விடுத்துள்ளார்.
லஞ்ச ஊழல் மீதான SPRM மின் சிறப்பு கண்காணிப்புக்குழுவின் உறுப்பினருமான Hassan Abdul Karim, லஞ்ச ஊழலை வேரறுக்கும் பக்காத்தான் ஹராப்பானின் செயல்திட்டத்திற்கு ஆதரவாக ஒரு முன்னுதாரண எம்.பி.யாக சிவகுமார் விடுப்பில் செல்வதே உத்தமம்.

காரணம், மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமான அரசாங்கமாக நாம் விளங்கிட வேண்டும் என்று மேடை தோறும் முழங்குகிறோம். பேசுகிறோம், விவாதிக்கிறோம். மற்றவர்கள் உத்தமர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பும் நாம், முதலில் நாம் உத்தமர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். லஞ்ச ஊழல் தொடர்பான விசாரணை நமக்கு எதிராக திரும்பும் போது, அந்த விசாரணைக்கு மதிப்பு அளிக்க வேண்டும். எந்தவொரு குறுக்கீடும் செய்யாமல் விசாரணை முடியும் வரையில் விடுப்பில் செல்ல வேண்டும். இதுதான் பக்காத்தன் ஹராப்பன் தலைவர்கள், மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் பாடாமாக இருக்க வேண்டும் என்று Hassan Abdul Karim குறிப்பிட்டார்.

அமைச்சரவையின் பணித் தன்மையே கூட்டுக்கடப்பாகும். ஓர் அமைச்சருக்கு ஏற்படக்கூடிய களங்கம், அதே கண்ணோட்டத்தில் அமைச்சரவையும் பார்க்க வைக்கும். எனவே பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிடுவதற்கு முன்பே சிவகுமார் விடுப்பில் செல்வதுதான் ஓர்அமைச்சர் என்ற முறையில் அவருக்கு கெளரவமாகும் என்று Hassan Abdul Karim வலியுறுத்தியுள்ளார்.

Related News

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்

சமூக ஊடகங்களில் குரானை அவமதிக்கும் புகைப்படம் - உடனடி விசாரணை நடத்த சபா மாநில அரசு உத்தரவு

சமூக ஊடகங்களில் குரானை அவமதிக்கும் புகைப்படம் - உடனடி விசாரணை நடத்த சபா மாநில அரசு உத்தரவு

பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்

பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்