பி.எஸ்.எம் எனப்படும் மலேசிய சோசலிஸ கட்சி, "இந்தியர்களின் எஸ்டேட்காரர்கள் கட்சி" என்று கூறியதற்காக தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பி.எஸ்.எம் கட்சியின் முக்கியத் தலைவரும் கோத்தா அங்கேரிக் நடப்பு சட்டன்ற உறுப்பினருமான முகமது நஜ்வான் ஹலிமி தெரிவித்துள்ளார்.
ஓர் அரசியல்வாதி என்ற முறையில் இனதுவேஷ தன்மையிலான அத்தகைய கருத்தை தாம் பதிவிட்டு இருக்கக்கூடாது என்றும், அந்த தகவலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக் கொண்டதற்காக தாம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் முகமது நஜ்வான் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் காப்பார் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேரு சட்டமன்றத் தொகுதியில் பி.எஸ்.எம் கட்சியின் தொழிலாளர் பிரிவு போராட்டவாதி 42 வயது சிவரஞ்சனி மாணிக்கம் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அக்கட்சி நேற்று அறிவித்து இருந்தது. மேரு தொகுதியில் ஓர் இந்தியப் பெண்ணான சிவரஞ்சனியை தனது வேட்பாளராக நிறுத்துவது மூலம் பி.எஸ்.எம் கட்சி, இந்தியர்களின் எஸ்டேட்காரர்கள் கட்சி என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளதாக முகமது நஜ்வான் ஏளனப்படுத்தியிருந்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


