Dec 23, 2025
Thisaigal NewsYouTube
மன்னிப்புக் கோரினார் பிகேஆர் நடப்பு சட்டமன்ற உறுப்பினர்
அரசியல்

மன்னிப்புக் கோரினார் பிகேஆர் நடப்பு சட்டமன்ற உறுப்பினர்

Share:

பி.எஸ்.எம் எனப்படும் மலேசிய சோசலிஸ கட்சி, "இந்தியர்களின் எஸ்டேட்காரர்கள் கட்சி" என்று கூறியதற்காக தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பி.எஸ்.எம் கட்சியின் முக்கியத் தலைவரும் கோத்தா அங்கேரிக் நடப்பு சட்டன்ற உறுப்பினருமான முகமது நஜ்வான் ஹலிமி தெரிவித்துள்ளார்.
ஓர் அரசியல்வாதி என்ற முறையில் இனதுவேஷ தன்மையிலான அத்தகைய கருத்தை தாம் பதிவிட்டு இருக்கக்கூடாது என்றும், அந்த தகவலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக் கொண்டதற்காக தாம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் முகமது நஜ்வான் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை​யில் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் காப்பார் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேரு சட்டமன்றத் தொகுதியில் பி.எஸ்.எம் கட்சியின் தொழிலாளர் பிரிவு போராட்டவாதி 42 வயது சிவரஞ்சனி மாணிக்கம் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அக்கட்சி நேற்று அறிவித்து இருந்தது. மேரு தொகுதியில் ஓர் இந்தியப் பெண்ணான சிவர​ஞ்சனியை தனது வேட்பாளராக நிறுத்துவது மூலம் பி.எஸ்.எம் கட்சி, இந்தியர்களின் எஸ்டேட்காரர்கள் கட்சி என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளதாக முகமது நஜ்வான் ஏளனப்படுத்தியிருந்தார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு