பி.எஸ்.எம் எனப்படும் மலேசிய சோசலிஸ கட்சி, "இந்தியர்களின் எஸ்டேட்காரர்கள் கட்சி" என்று கூறியதற்காக தாம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பி.எஸ்.எம் கட்சியின் முக்கியத் தலைவரும் கோத்தா அங்கேரிக் நடப்பு சட்டன்ற உறுப்பினருமான முகமது நஜ்வான் ஹலிமி தெரிவித்துள்ளார்.
ஓர் அரசியல்வாதி என்ற முறையில் இனதுவேஷ தன்மையிலான அத்தகைய கருத்தை தாம் பதிவிட்டு இருக்கக்கூடாது என்றும், அந்த தகவலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக் கொண்டதற்காக தாம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் முகமது நஜ்வான் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் காப்பார் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேரு சட்டமன்றத் தொகுதியில் பி.எஸ்.எம் கட்சியின் தொழிலாளர் பிரிவு போராட்டவாதி 42 வயது சிவரஞ்சனி மாணிக்கம் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக அக்கட்சி நேற்று அறிவித்து இருந்தது. மேரு தொகுதியில் ஓர் இந்தியப் பெண்ணான சிவரஞ்சனியை தனது வேட்பாளராக நிறுத்துவது மூலம் பி.எஸ்.எம் கட்சி, இந்தியர்களின் எஸ்டேட்காரர்கள் கட்சி என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளதாக முகமது நஜ்வான் ஏளனப்படுத்தியிருந்தார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


