நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் டிஏபி சார்பில் போட்டியிடவிருக்கும் புதிய முகங்கள் உட்பட 11 வேட்பாளர்களின் பெயர்களை கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக், நேற்றிரவு அறிவித்துள்ளார். இந்த 11 பேரில் இந்தியர்கள் மூவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு சட்டமன்ற உறுப்பினர்களான சிரம்பான் ஜெயாவில் பி. குணசேகரன், நீலாயில் ஜெ. அருள்குமார் மற்றும் ரெபாஹ் வில் எஸ்.வீரப்பன் ஆகியோர் தங்கள் தொகுதிகளை தற்காத்துக்கொள்வதற்கு போட்டியிடும் வாய்ப்பை கட்சி தலைமையகம் மீண்டும் வழங்கியுள்ளது. கடந்த 2018 பொதுத் தேர்தலில் இந்த மூவரில் அருள்குமார் மற்றும் வீரப்பன் ஆகியோர் நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
டிஏபி பொதுச் செயலாளரும், நெகிரி செம்பிலான் மாநில டிஏபி தலைவருமான அந்தோணி லோக், ஜெலுபு நாடாளுமன்ற்த தொகுதிக்கு உட்பட்ட சென்னாஹ் தொகுதியை தற்காத்துக்கொள்ள மீண்டும் களம் இறங்கியுள்ளார்.36 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கடந்த பொதுத் தேர்தலில் 11 தொகுதிகளை டிஏபி வென்றது.11 நடப்பு சட்டமன்ற உறுப்பினர்களில் 10 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள வேளையில் ரஹாங் தொகுதியில் மட்டும் டெஸ்மோன் டியான் மியாவ் கொங் என்ற புதிய வேட்பாளர் அறிமுகப்படுத்துப்பட்டுள்ளார் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.கடந்த பொதுத் தேர்தலில் ரஹாங் தொகுதியில் வெற்றி பெற்ற மேரி ஜோஸ்பின்க்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அரசியல்
நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் குணசேகரன், அருள்குமர், வீரப்பனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு
Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


