Apr 24, 2026
Thisaigal NewsYouTube
பகாங்கில் பூர்வக்குடியினரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்ய கோரிக்கை
அரசியல்

பகாங்கில் பூர்வக்குடியினரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்ய கோரிக்கை

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 15-

அரசியல்வாதிகளை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்வதை, பகாங் அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென, மலேசிய பழங்குடி மக்கள் கட்சியின் தலைவர் ரஷித் கா' கேட்டுக்கொண்டுள்ளார்.

பூர்வக்குடியினர் அதிகமாக வாழ்ந்துவரும் மாநிலங்களில், பகாங் -ங்கும் ஒன்று. அம்மாநிலத்தில் அதிகமான பூர்வக்குடியினர், கல்வியில் சிறந்த தேர்ச்சியைப் பெற்றவர்களாகவும் நிபுணத்துவ பின்னனிகளையும் கொண்டுள்ளனர்.

ஆகையால், அச்சமூகத்தினரை சேர்ந்தவர்களுக்கும் நியமன சட்டமன்ற உறுப்பினர்களாவதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என ரஷித் கா' வலியுறுத்தினார்.

UMNO, MCA, AMANAH, PKR ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நால்வரை, சட்டமன்ற உறுப்பினராக நியமிப்பது தொடர்பான தீர்மானம், நேற்று பகாங் சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், ரஷித் கா' அக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

பகாங் அரசாங்கம் கொண்டு வந்த அத்தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த PAS கட்சியின் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான், சிறும்பான்மையினரான இந்தியர்கள், பூர்வக்குடியினர், மாற்றுத்திறனாளிகள் அல்லது நிபுணத்துவம் வாய்ந்தவர்களிலிருந்து நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!