Mar 5, 2026
Thisaigal NewsYouTube
பகாங்கில் பூர்வக்குடியினரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்ய கோரிக்கை
அரசியல்

பகாங்கில் பூர்வக்குடியினரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்ய கோரிக்கை

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 15-

அரசியல்வாதிகளை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்வதை, பகாங் அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென, மலேசிய பழங்குடி மக்கள் கட்சியின் தலைவர் ரஷித் கா' கேட்டுக்கொண்டுள்ளார்.

பூர்வக்குடியினர் அதிகமாக வாழ்ந்துவரும் மாநிலங்களில், பகாங் -ங்கும் ஒன்று. அம்மாநிலத்தில் அதிகமான பூர்வக்குடியினர், கல்வியில் சிறந்த தேர்ச்சியைப் பெற்றவர்களாகவும் நிபுணத்துவ பின்னனிகளையும் கொண்டுள்ளனர்.

ஆகையால், அச்சமூகத்தினரை சேர்ந்தவர்களுக்கும் நியமன சட்டமன்ற உறுப்பினர்களாவதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என ரஷித் கா' வலியுறுத்தினார்.

UMNO, MCA, AMANAH, PKR ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நால்வரை, சட்டமன்ற உறுப்பினராக நியமிப்பது தொடர்பான தீர்மானம், நேற்று பகாங் சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், ரஷித் கா' அக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

பகாங் அரசாங்கம் கொண்டு வந்த அத்தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த PAS கட்சியின் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான், சிறும்பான்மையினரான இந்தியர்கள், பூர்வக்குடியினர், மாற்றுத்திறனாளிகள் அல்லது நிபுணத்துவம் வாய்ந்தவர்களிலிருந்து நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்