நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல், சிறப்பான அடைவு நிலையை பதிவு செய்ததைத் தொடர்ந்து விரைவில் நடைபெறவிருக்கும் ஜோகூர், புலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இடைத் தேர்தகளை எதிர்கொள்ள தாங்கள் தயாராகி வருவதாக ஜோகூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தலைவர் டத்தோ டாக்டர் சஹ்ருடின் ஜாமால் தெரிவித்துள்ளார். இந்த இடைத் தேர்தலுக்காக தாங்கள் 15 வேட்பாளர்களின் பெயர்களை பரிசீலித்துக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். இந்த பட்டியலில் பெர்சத்து, பாஸ் மற்றும் கெராக்கான் கட்சிகளின் வேட்பாளர்களும் அடங்குவர். ஒவ்வொரு கட்சியும் தலா 3 பெயர்களை வழங்கியிருக்கின்றன. தகுதியான வேட்பாளர்களை கட்சியின் தலைமைத்துவம் முடிவு செய்யும் என்று டாக்டர் சஹ்ருடின் அவர் குறிப்பிட்டார். கடந்த ஜுலை 23 ஆம் தேதி உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் டத்தோ செரி சலஹுடின் அயூப் காலமானதைத் தொடர்ந்து ஜோகூர் மாநிலத்தில் அவர் வகித்து வந்த நாடாளுமன்ற மற்றம் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன.

Related News

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா


