டிஏபி யின் முன்னணித் தலைவரும், போராட்டவாதியுமான ரோனி லியூவ், 60 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட அக்கட்சியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். தமது விலகல், நாளை முதல் அமலுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
சிலாங்கூர் சுங்கை பெலேக் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த ரோனி லியூவ், இன்று சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து டிஏபி யில் கடந்த 41 ஆண்டு காலமாக தாம் கொண்டு இருந்த உறுப்பினர் அந்தஸ்தும் ஒரு முடிவுக்கு வருவதாக குறிப்பிட்டார்.
டிஏபியின் மத்திய செயலவை உறுப்பினராக பதவி வகித்து வந்த ரோனி லியூ, டிஏபிமுன்னாள் தலைவர் லிம் கிட் சியாங், கட்சிக்குள் குடும்ப அரசியல் நடத்தி வருவதாக கடுமையாக குற்றஞ்சாட்டிய கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவர் ஆவார்.
இதன் காரணமாக அவர் பல்வேறு நிலைகளில் கட்சியின் தலைமைத்துவத்தினால் ஓரங்கட்டப்பட்டு வந்தார். தமது இளமைக் காலத்தில் உயர் நிலைக்கல்வியைத் தொடர்ந்து கொண்டே கடந்த 1982 ஆம் ஆண்டு டிஏபியில் ஓர் உறுப்பினராக ரோனி லியூ தன்னை பிணைத்துக்கொண்டு, படிபடியாக அரசியலில் உச்சம் பெற்றார்.

Related News

பாலோங் மற்றும் செம்போங் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரப் பொருட்கள் சேதம்

நெகிரி செம்பிலான் தேர்தல்: ஓராங் அஸ்லி வேட்பாளராக வரலாறு படைக்கும் இலக்குடன் களமிறங்கும் டயானா டால்

நெகிரி செம்பிலான் தேர்தல்: குறைந்தது 23 தொகுதிகளில் வெற்றி பெற பக்காத்தான் இலக்கு – அந்தோணி லோக்

"பிரதமர் உத்தரவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகத் தயார்" – முகமட் ஹசன்

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு


