Mar 12, 2026
Thisaigal NewsYouTube
ரோனி லியூவ் டிஏபி யை விட்டு விலகினார்
அரசியல்

ரோனி லியூவ் டிஏபி யை விட்டு விலகினார்

Share:

டிஏபி யின் முன்னணித் தலைவரும், போராட்டவாதியுமான ரோனி லியூவ், 60 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட அக்கட்சியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். தமது விலகல், நாளை முதல் அமலுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

சிலாங்கூர் சுங்கை பெலேக் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த ரோனி லியூவ், இன்று சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து டிஏபி யில் கடந்த 41 ஆண்டு காலமாக தாம் கொண்டு இருந்த உறுப்பினர் அந்தஸ்தும் ஒரு முடிவுக்கு வருவதாக குறிப்பிட்டார்.

டிஏபியின் மத்திய செயலவை உறுப்பினராக பதவி வகித்து வந்த ரோனி லியூ, டிஏபிமுன்னாள் தலைவர் லிம் கிட் சியாங், கட்சிக்குள் குடும்ப அரசியல் நடத்தி வருவதாக கடுமையாக குற்றஞ்சாட்டிய கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவர் ஆவார்.

இதன் காரணமாக அவர் பல்வேறு நிலைகளில் கட்சியின் தலைமைத்துவத்தினால் ஓரங்கட்டப்பட்டு வந்தார். தமது இளமைக் காலத்தில் உயர் நிலைக்கல்வியைத் தொடர்ந்து கொண்டே கடந்த 1982 ஆம் ஆண்டு டிஏபியில் ஓர் உறுப்பினராக ரோனி லியூ தன்னை பிணைத்துக்கொண்டு, படிபடியாக அரசியலில் உச்சம் பெற்றார்.

Related News

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்