Mar 5, 2026
Thisaigal NewsYouTube
பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் கவலையில்லை என அப்துல் ரஷித் அசாரி கூறுகிறார்
அரசியல்

பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் கவலையில்லை என அப்துல் ரஷித் அசாரி கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், மே 15-

பெர்சத்து கட்சியின் உறுப்பினர் தகுதியிலிருந்து, தாம் நீக்கம் செய்யப்பட்டால் தமக்கு சிறிதும் கவலையில்லை. அதன் வழி, இதர கட்சியில் இணையவதற்கான வாய்ப்பு தமக்கு கிட்டும் என செலாட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் ரஷித் அசாரி தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளரை ஆதரித்து, அதன் மேடைகளில் தாம் பரப்புரைகளில் ஈடுபட்டது, பெர்சத்து கட்சியின் சட்டத்தை மீறும் செயல் அல்ல.

சம்பந்தப்பட்ட பரப்புரையில் ஈடுபடுவதற்கு முன்பு, கட்சியின் அரசியலைமைப்பை தாம் நன்கு ஆராய்ந்த போது, அந்நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தடையை விதிக்கக்கூடிய சட்டவிதிகள் ஏதும் இல்லை என்றாரவர்.

கட்சியை விட்டு வெளியேறுவதாக வெளிப்படையாக அறிவித்தால் அல்லது இதர கட்சிகளில் இணைந்தால் மட்டுமே, கட்சியில் தமது உறுப்பினர் தகுதி பறிபோகும்.

ஆனால், இதுவரையில் தாம் அப்படி எதுவும் செய்யவில்லை என அப்துல் ரஷித் தெளிவுபடுத்தினார்.

கோல குபு பாரு இடைத்தேர்தலில், பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளருக்காக பரப்புரைகளில் ஈடுபட்டதற்காக, அப்துல் ரஷித்-ட்டும் தஞ்சோங் காராங் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் சுல்காபெரி ஹனாபி-யும் கட்சியின் உறுப்பினர் தகுதியை இழந்துவிட்டதாக, பெர்சத்து இதற்கு முன்பு அறிவித்திருந்தது தொடர்பில், அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் கவலையில்லை என அப... | Thisaigal News