அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நெகிரி செம்பிலானிலும், பினாங்கிலும் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெறுமானால் நெகிரி செம்பிலானில் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன்னும், பினாங்கில் சொவ் கொன் யொவ்வும் முறையே மந்திரி பெசார் மற்றும் முதலமைச்சர் பதவியில் நீடிப்பர் என்று அக்கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கூட்டுப்பணியைத் தொடருவது குறித்து பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ செரி அஹ்மாட் சாஹிட் ஹமிடியுடன் கலந்து பேசப்பட்டபின்னர், அமினுடினையே மாநில மந்திரி பெசாராக நியமிப்பது என்று உடன்பாடு காணப்பட்டதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இதேபோன்று பினாங்கிலும் சொவ் கொன் யொவ்வை மீண்டும் மாநில முதல்வராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பினாங்கு மாநிலத்தில் அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் ஆற்றல் சொவ் கொன் யொவ்வை விடம் இருப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


