அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நெகிரி செம்பிலானிலும், பினாங்கிலும் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெறுமானால் நெகிரி செம்பிலானில் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன்னும், பினாங்கில் சொவ் கொன் யொவ்வும் முறையே மந்திரி பெசார் மற்றும் முதலமைச்சர் பதவியில் நீடிப்பர் என்று அக்கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கூட்டுப்பணியைத் தொடருவது குறித்து பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ செரி அஹ்மாட் சாஹிட் ஹமிடியுடன் கலந்து பேசப்பட்டபின்னர், அமினுடினையே மாநில மந்திரி பெசாராக நியமிப்பது என்று உடன்பாடு காணப்பட்டதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இதேபோன்று பினாங்கிலும் சொவ் கொன் யொவ்வை மீண்டும் மாநில முதல்வராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பினாங்கு மாநிலத்தில் அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் ஆற்றல் சொவ் கொன் யொவ்வை விடம் இருப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


