Mar 5, 2026
Thisaigal NewsYouTube
இலக்கிடப்பட்டவர்களுக்கு மட்டும் டீசல் உதவித்தொகை; அமைச்சர்களின் ELAUNS-சை அதிகரிப்பதற்கான நடவடிக்கை அல்ல! பிரதமர் அன்வார் கூறுகிறார்.
அரசியல்

இலக்கிடப்பட்டவர்களுக்கு மட்டும் டீசல் உதவித்தொகை; அமைச்சர்களின் ELAUNS-சை அதிகரிப்பதற்கான நடவடிக்கை அல்ல! பிரதமர் அன்வார் கூறுகிறார்.

Share:

கோலாலம்பூர், ஜூன் 11-

இலக்கிடப்பட்ட மக்களுக்கு மட்டுமே டீசலுக்கான உதவித்தொகையை வழங்கும் நடவடிக்கையின் வழி, மிச்சப்படுத்தப்படும் 4 பில்லியன் வெள்ளி, அமைச்சர்களின் ELAUNS தொகையை அதிகரிப்பதற்கு பயன்படுத்துவதற்கு அல்ல என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தினார்.

நடப்பில், பொது போக்குவரத்து மற்றும் மக்களுக்கான STR எனப்படும் ரொக்கப் பணம் உதவி திட்டம் ஆகியவற்றுக்கான செலவுகள், 10 பில்லியன் வெள்ளி வரை எட்டியுள்ளது.

டீசலுக்கான உதவித் தொகையை சீர்ப்படுத்தும் நடவடிக்கையின் வழி, மிச்சப்படுத்தப்படும் தொகை, அவ்விரு திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும் என பிரதமர் கூறினார்.

SARA உதவித் தொகை, ஆண்டுக்கு 600 வெள்ளியிலிருந்து ஆயிரத்து 200 வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த திட்டம் உள்பட STR ரொக்கப் பண உதவி திட்டத்தின் வழி, 9 மில்லியன் பெருநர்கள் பலனடைகின்றனர்.

பணபலம் படைத்தவர்களும், வெளிநாட்டினரும் உதவித்தொகையைப் பெறுவதைத் தவிர்க்கவே, அரசாங்கம் இலக்கிடப்படவர்களுக்கு உதவித்தொகையை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளதை அனைவரும் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தின் அந்நடவடிக்கைக்கை மக்கள் சாடிவருவதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், உதவியை வழங்குவதில், முந்தைய அரசாங்கங்களின் காலாவதியான அந்த திட்டத்தை சரிசெய்ய வேண்டிய கடப்பாடு நடப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.

ஆசியாவிலேயே மலேசியாவில்தான் ஆக அதிகமாக உதவித்தொகை வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டின் நிதிநிலைமை மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே, மக்கள் விரும்பாத அந்நடவடிக்கையை, அரசாங்கம் அமல்படுத்தியுள்ளதாக கூறினார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு