Apr 23, 2026
Thisaigal NewsYouTube
மூன்று கட்டுமான நிறுவனங்களுக்கு தடை விதித்தது ஜோகூர் அரசாங்கம்
அரசியல்

மூன்று கட்டுமான நிறுவனங்களுக்கு தடை விதித்தது ஜோகூர் அரசாங்கம்

Share:

நவ. 24-

மலிவு விலை வீடுகளைக் கட்டத் தவறிய மூன்று கட்டுமான நிறுவனங்களுக்கு ஜோகூர் மாநில அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கையானது, குறிப்பிட்ட அந்த நிறுவனங்கள் கட்டிய பிற சொத்துக்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

ஜோகூர் மாநில அரசின் வீட்டுவசதி, ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர், டத்தோ Mohd Jafni Md Shukor இந்த நடவடிக்கையை விளக்கியுள்ளார். அவர் கூறுகையில், அக்கட்டுமான நிறுவனங்கள், மலிவு விலை வீடுகளை கட்ட வேண்டும் என்ற அரசின் கட்டளையை மீறியதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட அந்த மூன்று நிறுவனங்களும் கட்டிய அனைத்து சொத்துக்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை, அவர்கள் மலிவு விலை வீடுகளை கட்டி முடிக்கும் வரை நீடிக்கும் என்று Mohd Jafni தெரிவித்தார்.

ஜோகூர் மாநிலத்தில் மலிவு விலை வீடுகளை கட்ட வேண்டும் என்ற அரசின் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை என்று அவர் கூறினார்.

ஜோகூர் மாநில அரசாங்கம், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து கட்டுமான நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில், 100 கட்டுமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் பாதி நிறுவனங்கள், இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு மலிவு விலை வீடுகளை கட்ட ஒப்புக்கொண்டுள்ளன என்றார் அவர்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!