6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலின் வாக்களிப்பு தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனலும் நாளை ஜுலை 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிலாங்கூர் மாநிலத்தில் உறுப்புக்கட்சிகளின் தேர்தல் கேந்திரத்தை முடுக்கி விடவிருக்கின்றன. ஏற்கனவே கடந்த ஜுன் 24 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தேர்தல் கேந்திரத்தை முடுக்கிவிடும் நிகழ்வு வெற்றியளிக்கவில்லை. தற்போது தேர்தல் தேதி உறுதியாகி விட்டதால் பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனலும் இணைந்து தேர்தல் கேந்திரத்தை முடுக்கிவிடவிருக்கின்றன.
தெனெரா ஹோட்டல் அருகில் பண்டார் பாரு பாங்கியில் தேர்தல் கேந்திரம் முடுக்கி விடப்படவிருக்கும் இந்த நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


