Dec 22, 2025
Thisaigal NewsYouTube
ரொக்க உதவித் தொகையின் மொத்த அளவை அரசாங்கம் ஆராயும்
அரசியல்

ரொக்க உதவித் தொகையின் மொத்த அளவை அரசாங்கம் ஆராயும்

Share:

கோலாலம்பூர், ஜூலை 15-

டீசல் விலை உயர்வு காணுமானால் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் டீசல் உதவித் தொகைக்கான மொத்த அளவை அரசாங்கம் மறு ஆய்வு செய்யும் என் துணை நிதி அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்துள்ளார்.

மலேசிய புள்ளி விவர இலாகாவின் ஆய்வை அடிப்படையாக கொண்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர டீசல் உதவித் தொகையான 200 வெள்ளி ரொக்கம், தற்போது போதுமானதாக கருதப்படுகிறது.

அதேவேளையில் எதிர்காலத்தில் டீசல் விலை தொடர்ந்து உயர்வுக் காணுமானால் அந்த உதவிகத் தொகையை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் ஆராயும் என்று லிம் ஹுய் யிங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

டீசல் விலை உயர்வை அவ்வப்போது மறுமதிப்பீடு செய்து, டீசலுக்கான உதவித் தொகையின் மொத்த அளவை அரசாங்கம் தொடர்ந்து நிர்ணயித்து வரும் என்று பாரிசான் நேஷனலின் Libaran உறுப்பினர் டத்தோ சுஹைமி நசீர் கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலக்குக்கு உரிய டீசல் உதவித் தொகை அமலாக்கம் உட்பட நடப்பு சூழ்நிலையை அரசாங்கம் அணுக்கமாக கண்காணித்து வரும் என்று லிம் ஹுய் யிங் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்