Aug 26, 2026
Thisaigal NewsYouTube
நீக்கம் செய்தவர்களை கட்சியினுள் சேர்த்துக்கொண்டால், அம்னோவில் பிளவுகளே ஏற்படும்.
அரசியல்

நீக்கம் செய்தவர்களை கட்சியினுள் சேர்த்துக்கொண்டால், அம்னோவில் பிளவுகளே ஏற்படும்.

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 30-

நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலுக்கு பிறகு, கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட தலைவர்களையும் உறுப்பினர்களையும் மீண்டும் சேர்த்துக்கொண்டால், அம்னோவில் உட்பூசல்கள் ஏற்படும் என இல்ஹாம் மையம் ஆய்வு மையத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஹிசோம்முடின் பாக்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட அனைவரும், அம்னோவின் தேசிய தலைவரும் துணைப்பிரதமருமான டத்தோ ஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி-யைக் கடுமையாக எதிர்த்தவர்களாவர்.

ஜாஹித் ஹமிடி-யின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர, அவருக்கு எதிராக அத்தரப்பினர் மீண்டும் செயல்பட்டால், ஒற்றுமை அரசாங்கத்திலுள்ள அம்னோவில் பெரும் பிளவுகள் ஏற்படும் என்றாரவர்.

மேலும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைத்துக்கொள்வதால், பெரிக்காதான் நசியனால் கூட்டணி வசம் சென்றுள்ள இளம் வாக்காளர்களை அம்னோவால் கவர முடியும் என்ற உத்தரவாதம் இல்லை.

மாறாக, அந்த தரப்பினரை தங்கள் வசம் கவர்ந்திழுக்க, அம்னோ ஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட வேண்டுமென ஹிசோம்முடின் பாக்கர் வலியுறுத்தினார்.

Related News

நீக்கம் செய்தவர்களை கட்சியினுள் சேர்த்துக்கொண்டால், அம்னோ... | Thisaigal News