Mar 6, 2026
Thisaigal NewsYouTube
மின்யாக் தோட்ட தமிழ்ப்பள்ளி விவகாரம்: விரைந்து பரிசீலனை செய்வீர்
அரசியல்

மின்யாக் தோட்ட தமிழ்ப்பள்ளி விவகாரம்: விரைந்து பரிசீலனை செய்வீர்

Share:

உலுசிலாங்கூர், நவ.6-


சிலாங்கூர், பத்தாங் பெர்ஜுந்தையில் செயல்பட்ட மின்யாக் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் உரிமத்தை புதிய பகுதிக்கு இடம் மாற்றி, புதிய இடத்தில் அப்பள்ளியை நிறுவுவது மீதான திட்டத்தை உடனடியாக பரிசீலனை செய்யுமாறு கல்வி அமைச்சை, உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியப்பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மின்யாக் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் உரிமத்தை, உலு சிலாங்கூர் நாடாளுன்றத் தொகுதிக்கு உட்பட்ட செராண்டாவிற்கு மாற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்ட திட்டம், கடந்த 14 ஆண்டு காலமாக கிடப்பில் இருப்பதாக டாக்டர் சத்தியப்பிரகாஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பள்ளியின் உரிமத்தை செராண்டாவிற்கு இடம் மாற்றி, சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தில் பள்ளியை நிறுவதற்கு கடந்த 2012 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிலம், பொருத்தமான இடம் அல்ல என்று டாக்டர் சத்தியப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் புதிய இடத்தில் புதிய சூழலில் கட்டப்படவிருக்கும் தமிழ்ப்பள்ளி, அரசாங்கத்தின் நேரடிப் பார்வையில், அரசு முழு உதவிப்பெற்றப் பள்ளியாக நிர்மாணிக்கப்படுவதற்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், அந்த பள்ளிக்கு அரசுப்பள்ளி என்ற எஸ்.கே. அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் டாக்டர் சத்தியப்பிரகாஷ் கோரியுள்ளார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி