May 13, 2026
Thisaigal NewsYouTube
அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை
அரசியல்

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.29-

நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருனுக்கான ஆதரவை அம்னோ மீட்டுக் கொண்ட நிலையில், இது அந்தப் கட்சிக்கு தேவையற்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் என பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ரஃபிஸி, அம்னோவின் இந்த நடவடிக்கை, கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் ஏன் அக்கட்சியைப் புறக்கணித்தார்கள் என்பதை மீண்டும் நினைவுபடுத்துவதாகக் கூறியுள்ளார். கட்சி பலத்தை உறுதிப்படுத்த அம்னோ எடுக்கும் இத்தகைய முடிவுகள், சமூக ஊடகங்கள் வழியாக பொதுமக்களிடையே தவறான தோற்றத்தை உருவாக்கிவிடும் எனவும், குறிப்பாக நடுநிலை வாக்காளர்களின் எண்ணத்தை மாற்றுவது இனி கடினம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நெகிரி செம்பிலான் ஆட்சியாளரை நீக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் விவகாரத்தில், மந்திரி புசார் மீது நம்பிக்கையில்லை எனக் கூறி 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி